Friday 28 April 2017

பாகுபலி 2 - சினிமா விமர்சனம்

கண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல போய் பரவசத்தை அனுபவித்து விட்டு வாருங்கள். 


2009ல் இருந்து சினிமா விமர்சனம் எழுதிக் கொண்டு இருக்கிறேன். ரொம்ப வருடமாக வெள்ளிக்கிழமை சினிமாவுக்கு போகாமல் இருந்ததே இல்லை. ஆனால் அயனாவரத்துக்கு வீடு மாறிய பிறகு நேரமும் இடமும் தகையாமல் சினிமாவுக்கு போக முடியவில்லை, விமர்சனமும் எழுத முடியவில்லை. 

பைரவாவில் இருந்து விட்டுப் போனதை தொடரலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. இந்த படத்தில் இருந்து விமர்சனத்தை தொடர நினைக்கிறேன், பார்ப்போம் முடியுமா என்று. 

படத்தின் சுவாரஸ்ய முடிச்சுகள் என்னையறியாமல் நான் சொல்லி விடும் வாய்ப்பு இருப்பதால் சுவாரஸ்யத்துடன் பார்க்க நினைப்பவர்கள் இத்துடன் கழண்டு கொள்ளலாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் துவங்குகிறது.


பிரபாஸை அரசனாக அறிவித்த பிறகு முடிசூட்டிக் கொள்ள நாடும் நாயகனும் தயாராகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பிரபாஸ் அனுஷ்காவை சந்திக்கிறார். அவரிடம் காதல் வயப்பட்டு மன்மத சாகசங்கள் புரிந்து கொண்டு இருக்கும் வேலையில் தகவல் தொடர்பு சிக்கல் காரணமாக பிரபாஸ்க்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் இடைவெளி ஏற்படுகிறது.

அதை பயன்படுத்தி ராணா அரசனாகிறார். மக்கள் பிரபாஸ் பக்கம் நிற்க வெறுப்படையும் ராணா சூழ்ச்சி செய்து பிரபாஸை கொல்கிறார் (தட் பாகுபலியை கட்டப்பா எந்துக்கு சம்ப்பயாடு மொமண்ட்), மகன் சரத் குமார் ச்சே (அப்பா மகன் கதையென்றாலே சரத்குமார் தான் நினைவுக்கு வருகிறார்) பிரபாஸ் பழிக்கு பழி வாங்குவதே பாகுபலி 2 படத்தின் கதை.

முதல் பாதி பரபரவென எங்கும் தொய்வில்லாமல் இடைவேளை வரை செல்கிறது. அதுவும் இடைவேளையில் பதவியேற்கும் நிகழ்வும் மக்களின் எதிர்வினையும் சிலிர்க்கிறது, வேறென்ன மயிர் தான். 

இன்டர்வெல் விட்டதும் ஒன்னுக்கு அடிக்க செல்பவன் கூட கக்கத்தில் கட்டி வந்தவன் போல் கையை அகட்டிக் கொண்டே செல்கிறான். அந்தளவுக்கு மக்கள் படத்துடன் ஒன்றியிருந்தார்கள்.


அதன் பிறகு சில காட்சிகள் லேக் ஆகிறது. அதுவும் க்ளைமாக்ஸ் ரொம்ப ஓவர்ர்ர்ரு. மேன் ஆப் ஸ்டீல் (படத்தின் பேரு அதுதான) படத்தில் வரும் ரோபோ சண்டை போல் ஆகிறது. இரும்பால் அடித்துக் கொள்கிறார்கள், கருங்கல்லால் அடித்துக் கொள்கிறார்கள். பனைமரத்தை ப்ளெக்ஸிபிலாக்கி 100 அடிக்கு கும்பலாக பறக்கிறார்கள். எப்படா படம் முடியும் என்பது போல் ஆகி விட்டது.

ஆனால் இதையெல்லாம் மீறி படத்தின் ஆக்கத்திற்காக கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய படம் இது. என்ன மாதிரியான காட்சிகள், என்ன மாதிரியான நுண்ணுழைப்புகள், நம்ம ஊரு சினிமாடா என்று காலரை தூக்கி விட்டுக்கலாம்.

படம் முழுக்க வருகிறார் சத்யராஜ், படத்தின் நாயகன் இவரோ என்று நமக்கு சந்தேகமே வருகிறது. சிறந்த பண்பட்ட நடிப்பு, காலம் கொடுத்த கொடை இப்படத்தில் பிரதிபலிக்கிறது. நாசர் அந்த நயவஞ்சகம், மகன் மீதான பாசம், குறுக்குபுத்தி, இறுதியில் எல்லாம் இழந்து அவமானத்தில் குறுகி சபையில் நிற்கும் போது அனுபவத்தை கொட்டியிருக்கிறார்.


நாயகனின் அறிமுக காட்சியில் மதம்பிடித்த யானை ஒரு  பக்கம் ஓடி வருகிறது, எதிரில் ரம்யா கிருஷ்ணன் நடந்து வர, கதவை உடைத்து நாயகன் என்ட்ரி, நான் கூட பயந்துட்டேன். முதல் பாகத்தில் காட்டெருமையை வில்லன் அடக்கி மண்டையில் மடாரென அடித்து வீழ்த்துவது போல் பிரபாஸ் ஒரே கொட்டுல யானையை வீழ்த்திடுவாரோ என, நல்ல வேளை அப்பயெல்லாம் ஒன்று நடக்க வில்லை, கோட்டான கோடி நன்றி ஏசப்பா, கோட்டான கோடி நன்றி.

அனுஷ்காவிடம் காதல் கொண்டு ஒன்றும் தெரியாத அப்பாவியாக நடித்து விட்டு ஒரு எதிர்பாராத சமயத்தில் கத்துக்கிட்ட எல்லா வித்தையையும் இறக்கி அனுஷ்காவை கவரும் காட்சியில் மூளையை கழட்டி மெய்சிலிர்க்க வைக்கிறது. 

அனுஷ்கா, பிரபாஸ், ராணா பற்றி என்ன சொல்ல, படத்திற்காக 5 வருடம் உழைத்து உடம்பை ஏற்றி இறக்கி பாடுபட்டு இருக்கிறார்கள், அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள். ராஜமௌலியின் முத்திரை படம் நெடுக இருக்கிறது. 

யார் என்ன சொன்னாலும், யார் இழந்து பேசினாலும், யார் கழுவி ஊத்தினாலும், எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தயவு செய்து படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். ஒரு நல்ல அனுபவம் காத்திருக்கிறது. 

ஆரூர் மூனா

Thursday 12 January 2017

பைரவா - சினிமா விமர்சனம்

படம் விமர்சனம் பண்ணி ரொம்ப நாளானதால் இப்ப டைப் பண்ணும் போது கையெல்லாம் குதூகலிக்குது.


கம்ப ராமாயணத்துல கண்டேன் சீதையைனு சொன்ன மாதிரி படத்தின் விமர்சனத்தை முதல் பாரவுலயே சொல்லிடுறேன், என்னடா இவன் கம்பராமாயணமெல்லாம் படிச்சிருப்பானோன்னு நினைக்க வேண்டாம், ஏதோ ஒரு கம்பர் கழக விழாவில் ஒரு பேச்சாளர் சொன்னது மனதில் பச்சக் கென்று ஒட்டிக்கிட்டது, அனுமன் சீதைய பார்த்த பின் ராமரை சந்திக்க சென்று சந்திக்கும் போது, போன விஷயம் வந்த விஷயம் எல்லாம் சொல்லி அவர் ஆர்வத்தை காத்திருக்க வைக்க வேண்டாம் என்று எடுத்ததும் கண்டேன் என்று சொல்லி பிறகு தான் சீதைன்னு சொல்லுவாராம், அந்த மாதிரி தான் இந்த விமர்சனத்தின் கடைசி பாராவை முதலிலேயே சொல்லி விடுகிறேன், 


படம் பக்கா தெலுகு மசாலா ஆக்சன் படம். லெஜண்ட், டெம்பர், தூக்குடு மாதிரி ஒரு படம். திருப்பாச்சி, சிவகாசி வரிசையில் இந்த படம் ஓடிவிடும். கலெக்சன் 100 கோடியை தொட்டு விடும். ஏன் எதற்கு என்று லாஜிக்கெல்லாம் இந்த படத்தில் பார்க்க கூடாது. விமர்சகர்கள் கிழி கிழி என்று கிழிப்பார்கள். 

இந்த படத்தை துப்பாக்கி, கத்தி வரிசையில் வைத்தால் சாமி வந்து கண்ணை குத்தி விடும். சரி இனி விமர்சனத்திற்கு போய் விடுவோம்.

ஸ்பாய்லர் இருக்கும் அதனால் படம் பார்த்து பிறகு படிக்க நினைக்கும் கண்மணிகள் ஜுட் விட்டு விடவும்.

--------------------------------------

சென்னையில் இருக்கும் விஜய், நெல்லையிலிருந்து சென்னை வரும் கீர்த்தியை பார்த்ததும் காதலிக்கிறார். பிறகு அவருக்கு படாபடா வில்லனான ஜெகபதிபாபுவினால் பெரிய பிரச்சனை இருப்பதை தெரிந்து கொள்ளும் விஜய், தனியாளாக நெல்லை சென்று எல்லாப் பிரச்சனைகளையும் டபக்கு டபக்கு என்று தீர்த்து வைத்து ஜெகபதி பாபுவையும் தீர்த்து வைத்து படத்தை முடித்து வைக்கிறார். 


இது என்ன மாதிரியான படம் என்பது முதல் சண்டைக்காட்சியிலேயே தெரிந்து விடுகிறது. கிரிக்கெட் பேட் பால் வைத்து முதல் வில்லனை பழி தீர்த்து அறிமுகமாகும் போதே நம் காதில் ரத்தம் வழிகிறது. விஜய் ரசிகன் என்னும் கண்ணாடி அணிந்து பார்ப்பவன் கும்மாளமிடுகிறான். 

கலர் கலரா உடைகளை அணிந்து க்ளைமாக்ஸுக்கு முன் ஹீரோ, ஹீரோயின் மற்றும் குடும்பங்களே ஆடும் குத்தாட்டம், லாஜிக் என்ற வஸ்து இல்லாத ஹீரோ ஓர்க்ஷிப் காட்சிகள், செம த்ரிலிங்கான இன்டர்வெல் ப்ளாக், கொஞ்சம் கூட சிரிப்பே வராத சதீஷின் காமெடி, பகுதி வில்லன் மைம் கோபி, மீடியம் வில்லன் டேனியல் பாலாஜி என அக்மார்க் தெலுகு படம் இது. டப்பிங் செய்து வெளியிட்டாலேயே போதும், தெலுகில் ஒரு 100 கோடி கலெக்சன் பார்த்து விடலாம்.



விஜய், சில வருடங்களாக மசாலா கொடுமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து நம்மை பாதுகாத்து வைத்திருந்த விஜய், மீண்டும் அதே மசாலாவை அண்டா அண்டாவாக அள்ளி தெளித்து வைத்து மீண்டும் பல வருடங்கள் பின்னே சென்று விட்டார். படத்தில் மைனஸ் கதை திரைக்கதையை விட பெரியது விஜய்யின் ஹேர்ஸ்டைல் தான். சகிக்கல.

கீர்த்தி சுரேஷ் வந்து டங்கு டங்கு என்று குதித்து விட்டு போகாமல் பெர்பார்ம் பண்ணும் படியான கதாபாத்திரம், கவனிக்கும் படி செய்கிறார். க்ளைமாக்ஸ்க்கு முந்தைய குத்தாட்டத்தில் 3 கலர்ல பாவாடை தாவணி கட்டி பார்ப்பவர்களை கண்ணு வழியே ஜொள்ளு விட வைக்கிறார்.

படத்தில் மொக்க காமெடி போடும் சதீஷ், எதுக்கென்றே தெரியாமல் மொட்டை ராஜேந்திரன், இரண்டாம் பாதியில் கழுத்தறுக்கும் தம்பி ராமையா எல்லா காமெடிக்கான எல்லாம் பார்ட்ஸும் படு வீக்கு.


டேனியல் பாலாஜி நன்றாக பெர்பார்ம் செய்துள்ளார். கவனிக்க வைக்கும் நடிப்பு. ஜெகபதிபாபு லெஜண்ட் படத்தில் செய்துள்ளதை ரிபீட் செய்துள்ளார். 

இவ்வளவு கொடுமைகள் இருந்தும் படம் நல்லாயிருக்கு சீன் பார்மேட் சரியாக வைத்துள்ளார்கள், சில இடங்களை தவிர. க்ளைமாக்ஸ் காதில் பூ சுற்றுகிறது. 

கீர்த்தி சுரேஷின் ப்ளாஷ்பேக் முடிந்ததும் வரும் சண்டைக்காட்சியும் அதன் பின்னான பஞ்ச் வசனங்களும் செம செம, பொங்கல் போன்ற விழா சமயங்களில் இந்த மாதிரியான படங்கள் வெளி வந்தால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

ப்ளாஷ்பேக் வரும் வரையான காட்சிகள், இரண்டாம் பாதியில் அரைமணிநேரம் காட்சிகள் கடுப்படிக்கிறது, மிச்சமிருக்கும் இரண்டரை மணி நேரத்தை விசிலடித்து கொண்டாடி விட்டு தியேட்டரை விட்டு வெளியில் வந்தும் மறந்து விட்டால் இது பொங்கல் கொண்டாட்டத்திற்கான படமே. 

ரொம்ப நாளைக்கு பிறகு 
திருவாரூரிலிருந்து ஆரூர் மூனா