Thursday 30 April 2015

வை ராஜா வை - சினிமா விமர்சனம்

ரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்களை அரங்கிற்கு திரட்டி சரியாக 07.30க்கு இன்று காட்சி இல்லை. உத்தம வில்லன் டிக்கெட் எடுத்தவங்களெல்லாம் வை ராஜா வை படத்திற்கு போங்க என்று அறிவித்தால் வேறு என்ன தான் நினைப்பதாம்.


எனக்கு கௌதம் கார்த்திக்கை பிடிக்காது. ஐஸ்வர்யா தனுஷ் எடுத்த 3 படத்தை முதல் நாள் முதல்காட்சி பார்த்து அனுபவப்பட்டவன் நான். எனக்கு எப்படி வை ராஜா வை படம் பிடிக்கும். ஆனாலும் படம் பாக்குற மாதிரி தான் தான் இருக்கு.

படம் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு நிமிடம் குறைவாகத் தான் இருக்கிறது. ஆனால் எனக்கு படம் போரடிக்கவில்லை. படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. நான் இதில் பாடல் காட்சிகள் மட்டும் விதிவிலக்கு.


ஈஎஸ்பி பவர் என்பது நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் பவர். இது எல்லா நேரத்திலும் எல்லாத்தையும் கண்டறியக்கூடியது இல்லை. சில நேரம் ஒரு மாதிரி மங்கலாக நினைவுக்கு வரலாம்.அவ்வளவுதான். ஆனால் அந்த லாஜிக் எல்லாம் இந்த படத்திற்கு ஒத்துவராது.

கௌதம் கார்த்திக் ஒரு மிடில்கிளாஸ் இளைஞன். சிறுவயதில் இருந்த ஈஎஸ்பி பவர் தந்தையின் கட்டுப்பாட்டினால் மறந்து போய் இருக்கிறது. பிரியா ஆனந்தை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார். வேலையும் கிடைத்து விடுகிறது. அந்த நேரத்தில் விவேக்கின் நட்பு கிடைக்கிறது.


கௌதம் கார்த்திக்கின் ஈஎஸ்பி பவர் விவேக்குக்கு தெரிந்து அந்த சக்தியை வைத்து ஒரு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஒரு கோடி ஜெயிக்கிறார். அவரிடம் பணம் இழந்த வில்லன் டேனியல் பாலாஜி கௌதம் கார்த்திக்கை வலுக்கட்டாயமாக மிரட்டி அவரது ஈஎஸ்பி பவரை வைத்து ஒரு சூதாட்ட கேசினோவில் பலகோடி ஜெயிக்க நினைக்கிறார். அவரை வீழ்த்த நினைக்கிறார் கௌதம் கார்த்திக். என்ன நடந்தது என்பதே வை ராஜா வை படத்தின் கதை.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு கௌதம் கார்த்திக்கை பிடிக்கவேயில்லை. அவரது முதல் படத்திலிருந்தே அப்படித்தான். அவரது முகவெட்டு கதாநாயக தோற்றத்தை தரவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் இந்த  படத்தில் அவர் இருக்கிறார். அவருக்கு அது போதும்.


பிரியா ஆனந்த் இந்த படத்திற்கு ஏன் என்றே தெரியவில்லை. இரண்டு பாட்டிற்கு வருகிறார். தேவையில்லாமல் கோவப்படுகிறார். பிறகு சேர்ந்து கொள்கிறார். காதலர்கள் என்றால் எப்பப்பாத்தாலும் எல்லார் முன்னாடியும் ஈஷிக்கிட்டே இருக்கனும்னு எவண்டா ஐஸ்வர்யாவுக்கு சொன்னது.

சதீஷ் மட்டும் அவ்வப்போது சில ஒன்லைனர்களால் சிரிக்க வைக்கிறார். விவேக் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறி விட்டார். காமெடி சரக்கு தீர்ந்து போனவருக்கு இது நல்ல மாற்று. மனோபாலா வரை இருந்தும் படத்தில் காமெடிகள் குறைவாகவே இருக்கிறது.

தனுஷ் க்ளைமாக்ஸில் படத்தை முடித்து வைக்க வருகிறார். அவ்வளவு தான்.  தேவையே இல்லாமல் கௌரவ தோற்றத்தில் டாப்ஸி, அப்புறம் எஸ்.ஜே. சூர்யா. படத்தின் வியாபாரத்திற்கு இந்த கௌரவ தோற்றங்கள் எந்தவிதத்திலும் உதவப் போவதில்லை.

படத்தின் இன்றைய வசூல் எல்லாமே உத்தமவில்லனுக்கு போக வேண்டியது. அவ்வளவு தொலைவில் இருந்து உத்தம வில்லன் பார்க்க கிளம்பி வந்தவர்கள் எல்லாம் சும்மா போக வேண்டாம் என்பதற்காக வைராஜாவை படம் பார்த்து சென்றார்கள். 

ஒரு சிறப்பு காட்சி கூட இன்று இல்லை. ஆனால் காலை எட்டு மணிக்கு ஐந்து திரையரங்கங்களிலும் வை ராஜா வை படம் சிறப்பு காட்சிகளாக அரங்கு நிறைந்து ஒடுகிறது. ஜெய் உத்தம வில்லன்.

ஏண்டா போனோம் என்று யோசிக்க வைக்கவும் இல்லை. பார்த்த பிறகு தலையை வலிக்கவும் இல்லை. இந்த நேரத்தில் 3 படம் 08.00 மணிக்காட்சி பார்த்து விட்டு இரவு வரை சரக்கடித்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

கொஞ்சநாள்ல படம் எப்படியும் டிவியில போட்டுடுவாய்ங்க. வெயிட் அண்ட் வாட்ச்.

ஆரூர் மூனா

5 comments:

  1. நன்றி வொர்க் ஆகுது :)

    ReplyDelete
  2. இப்படி விமர்சனம் இருந்தால் தயாரிப்பாளர்கள் என்னவாவது?

    ReplyDelete