Thursday 2 April 2015

நண்பேன்டா - சினிமா விமர்சனம்

80களில் நகைச்சுவை தோரணங்களை தொகுத்து எஸ்.வி.சேகர் நாயகனாக நடித்து வந்த படங்கள் ஆவதெல்லாம் பெண்ணாலே, சகாதேவன் மகாதேவன், மனைவி ஒரு மந்திரி. இவற்றுக்கும் நண்பேன்டா படத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை. நண்பேன்டா எஸ்.வி.சேகர் படங்களின் வெர்ஷன் 2.0


பெரிய அப்பாடக்கர் கதையெல்லாம் ஒன்றுமில்லை. தஞ்சாவூரில் வெட்டியாக சுத்திக் கொண்டு இருக்கும் உதயநிதி திருச்சியில் இருக்கும் சந்தானத்தை பார்க்க வருகிறார். அங்கு நயன்தாராவை பார்த்து காதல் கொள்கிறார். அவருக்காகவே திருச்சியில் தங்கி லவ் டார்ச்சர் கொடுக்கிறார். 

நயன்தாராவுக்கும் உதயநிதி மீது காதல் வருகிறது. ஆனாலும் மோதல் வந்து காதலை தள்ளிப் போடுகிறது. பின்பு சேர்ந்தார்களா என்பதை படமாக சொல்லியிருக்கிறார்கள்.

கையில் காசு இருக்கு என்பதற்காக இந்த அடாசு கதைக்கு நயன்தாரா, சந்தானம், ஹாரிஸ் ஜெயராஜ் என கோடியில் சம்பளம் வாங்குபவர்களை அமர்த்தியிருக்கிறார்கள்.


ஆனாலும் இந்த துணுக்கு தோரணங்கள் அங்கங்கே ரசிக்கவும் செய்கின்றன. நான் சில இடங்களில் நல்லாவே சிரித்தேன். எனக்கு முன்சீட்டில் இருந்த குடும்பம் மொத்த படத்தையும் கலகலவென சிரித்து ரசித்து பார்த்தனர். அதில் எல்லாம் ஒரு குறையும் இல்லை.

உதயநிதி தமிழ்சினிமாவின் முன்னணி நாயகனாக வேண்டும் என முடிவெடுத்து விட்டால் இந்த மாதிரி இனி நடிக்கவே கூடாது. இனியும் தொடர்ந்தால் ஜெய் இடம் கூட கிடைக்காது.

நல்லாத்தான் சிரிச்சேன். இப்ப வந்து யோசிச்சிப் பார்த்தா ஒரு காட்சி கூட சொல்கிற மாதிரி நினைவில் இல்லை. எல்லாம் வார்த்தை விளையாட்டு காமெடி தான்.


நயன்தாரா சில காட்சிகளில் தன் அழகால் ரசிக்க வைக்கிறார். ஆனால் பல இடங்களில் வயசாகிடுச்சோ என்று தோணவும் வைக்கிறார்.

ஷெரீன், துள்ளுவதோ இளமை வந்த போது எப்படிப்பட்ட பிகர். எவ்வளவு இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தார். இப்ப நல்லா கொழு கொழுன்னு ஆண்ட்டியாகி விட்டார். எல்லாம் காலம் செய்த கோலமடி.

கௌரவ வேடத்தில் வரும் தமன்னா கூட கொஞ்ச நாள் கழிச்சி பார்ப்பதால் இதே போல் தான் தெரிகிறார்.

சித்ரா லட்சுமணன் சந்தானத்தை வைத்து காமெடியில் விளையாட களம் இருந்தும் அந்த இடத்தை காமாசோமாவென்று கடந்து செல்கிறார்கள். 

இருவரும் பிரிவதற்கான காரணம் இருப்பதிலேயே அல்பத்திலும் அல்பம். நாயை உதைத்து அது செத்துப் போனதால் ஜெயிலுக்கு போனதாக நயன்தாரா சொல்ல அதற்காக உதயநிதி சிரிக்க நயன்தாரா கோச்சிக்கிட்டு போறாராம். காதல்ல பிரிவு வந்துடுதாம். அடப் போங்கடா.

கருணாகரன் இந்த படத்தில் டம்மிப் பீஸாக வந்து செல்கிறார். இருக்கும் இடத்தில் இருந்தால் தான் அவருக்கு மரியாதை. சந்தானத்தின் கூட காமெடி செய்ய வந்தால் இப்படித்தான் காணாமல் போக வேண்டியிருக்கும்.

இவ்வளவு சிக்கலையும் தாண்டி படம் பார்க்கும்படியாக, ரசிக்கும் படியாக, சிரிக்கும்படியாக இருக்க ஒரே காரணம் சந்தானம். இவர் மட்டும் இல்லையென்றால் படம் காலி தான்.

டைமிங் கவுண்ட்டர் எடுத்து கொடுப்பதாகட்டும், ஹோட்டலுக்கு ரூம் போட வந்தவன் குடும்பஸ்தனா, தள்ளிக்கிட்டு வந்தவனா என சோதனை செய்வதாகட்டும், ஷெரீன் கூட ரொமான்ஸ் செய்வதாகட்டும், தமன்னா வச்ச மிச்சத் தண்ணியை மடக்கென குடித்து க்ளாப்ஸ் அள்ளுவதாகட்டும் மனுசன் பட்டைய கிளப்பியிருக்கிறார்.

சரியான கோடைக்காலம் வெளியில வெயில் தாள முடியலை, கொஞ்ச நேரம் ஏசியில் இருக்கனும், அதே நேரத்தில் சிரிச்சிக்கிட்டும் இருக்கனும் என்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் நண்பேன்டா.

ஆரூர் மூனா

1 comment:

  1. ஏசி வேலை செய்யுதான்னு கேட்டுட்டு தான் போகணும்... ஹிஹி...

    ReplyDelete