Friday 30 January 2015

ஏதோ கிறுக்கினேன்

எப்போதும் தமிழில் தட்டச்சு செய்ய என்ஹெச்எம் ரைட்டர் பயன்படுத்துவேன் அல்லது அகப்பை தமிழ் ரைட்டர் என்னும் தளத்தில் தட்டச்சு செய்வேன். இரண்டுமே நான் நினைப்பதை அதே வேகத்தில் எழுத்தாக்கி விடும். வேகமாக தட்டச்சு செய்வதால் அரைமணியில் ஒரு பதிவு முடிந்து விடும். 


ஆனால் இப்போ அகப்பை தமிழ் ரைட்டர் தளம் இயங்கவில்லை. என்ஹெச்எம் ரைட்டர் சாப்ட்வேரில் ஏதோ பிரச்சனை, சரியாக இயங்கவில்லை. அதனாலேயே பதிவுகள் எழுத முடியாமல் போய் விட்டது. நம் சிந்தனையில் வருவது அரைமணிக்குள் பதியவில்லை என்றால் மறந்து போய் விடுகிறது.

ரொம்ப சிரமமாக இருக்கிறது. 

கூடுதலாக வசந்தமுல்லையின் அலும்புகள் இன்னும் படுத்துகிறது. தட்டச்சு  சிக்கலை தாண்டி வலுக்கட்டாயமாக பதிவெழுத நான் அமர்ந்தால் தாவி என் மடிக்கு வந்து அமர்ந்து தடால்புடால் என்று தட்டி கீபோர்டு, மவுஸ் எல்லாத்தையும் டேபிளில் இருந்து தள்ளி விடுகிறாள். 


அவள் தூங்கும் நேரம் தட்டச்சு செய்யலாம் என்றால் நான் வேலைக்கு போகும் நேரம் தூங்கி விட்டு நான் திரும்ப வந்ததும் எழுந்து குறும்புகளை ஆரம்பித்து விடுகிறாள். இரவு 11மணிக்கு தான் தூங்குகிறாள். கொடுமை என்னவென்றால் நான் 10.30க்கே கொட்டாவி விட்டு படுக்கையில் சாய்ந்து விடுகிறேன்.

ஆனாலும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். வசந்தமுல்லையின் குறும்புகளுக்கு முன்னால் ப்ளாக்கும், பேஸ்புக்குமா பெருசு.

இப்போ காலை 11.30க்கு வேலை முடிந்து திரும்பும் பர்ஸ்ட் ஷிப்ட் கிடையாது. மதியம் 02.30க்கு உள்ளே செல்லும் செகண்ட் ஷிப்ட் வேலை. அதனால் படத்துக்கு செல்ல நேரம் உகந்ததாக இல்லை. அதனால் சினிமா விமர்சனமும் குறைவாகத்தான் இருக்கும்.

வாங்கிய புத்தகங்களை எல்லாம் படித்து முடித்தாகி விட்டது. படிப்பதற்கு புத்தகங்கள் இல்லாமல் கடுப்பாக இருந்தது. சரியான நேரத்தில் பிடிஎப் பார்மேட்டில் புத்தகங்களை எடுப்பதற்கு வசதியான வலைத்தளங்களை அறிமுகப்படுத்திய நண்பர் வழக்கறிஞர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி.

என் அப்பாவின் கடுமையான எதிர்ப்பினால் குறும்பட வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறேன். "வேகம் விவேகமல்ல", "விருச்சிககாந்த்" என்ற இரண்டு குறும்பட படபிடிப்புகளும் முடிந்து விட்டது. எடிட்டிங், டப்பிங், பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகள் பாக்கி இருக்கிறது.

ஊரில் படப்பிடிப்பு நடந்த நேரத்தில் நான் செய்த அலப்பறைகளை பார்த்தவர் "உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை, இப்பத்தான் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து மீண்டு வந்துள்ளாய். இப்போ சினிமா வேலையெல்லாம் தேவையா, இன்னொரு முறை படப்பிடிப்பு, சினிமா, அது, இது என்று என் காதில் விழுந்தது, முட்டியை பேத்துடுவேன்" என்று ஓவர் சவுண்டு விட்டார். அவர் வார்த்தைக்காக எல்லாத்தையும் சற்று நிறுத்தி வைத்துள்ளேன். பத்து நாட்களில் அவர் ஊருக்கு போன பின்னாடி தான் மற்ற வேலைகளை தொடங்க வேண்டும்.

தமிழில் தட்டச்சு செய்யும் நல்ல சாப்ட்வேரை கண்டறிந்த பிறகு வழக்கம் போல் பதிவுகள் வரும்.

ஆரூர் மூனா

Friday 23 January 2015

தொட்டால் தொடரும் - சினிமா விமர்சனம்

படத்தின் கதையை விட படம் பார்க்க போனது தான் இன்னும் சுவாரஸ்யம். மதியம் 1.10 மணிக்காட்சி. வீட்டை விட்டு 11 மணிக்கு கிளம்பி கூடவே வர்றேன்னு சொன்ன சைத்தானை அழைத்துக் கொண்டு பைக்கில் கிளம்பினேன். பீனிக்ஸ் மால் என்ட்ரி டைம் 01.05. முதல் முறையாக மாலின் உள் நுழைகிறேன். தட்டுத்தடுமாறி திரையரங்கை கண்டுபிடித்து உள்ளே நுழையும் போது மணி 1.40. முதல் பாதியில் பெரும் பகுதி கடந்திருந்தது. 


நமக்கு இந்த ஓவர் அல்ட்டாப்பு ஒத்து வராது. மகாதியானத்திற்கு போனால் கூட நட்சத்திர பாருக்கு செல்ல மாட்டேன். அங்கு அவுன்ஸ் கணக்கு செட்டாகாது. அளவும் தெரியாமல் தாண்டிப் போய் விடும் அல்லது தொண்டை நனைக்க மட்டும் செய்யும். கால் கல்லு, அரைக்கல்லு வாங்கி ரெண்டு ஆப்பாயிலு சேர்த்து உள்ளே தள்ளினா தான் திருப்தி கிடைக்கும்.

அது போல் தான் இந்த அரங்கமும். நமக்கு வண்டியை நிறுத்தி இரண்டு நிமிடங்களுக்குள் அரங்கில் அமரும் வில்லிவாக்கம் ஏஜிஎஸ், கொளத்துர் கங்கா, பெரம்பூர் எஸ்2, வில்லிவாக்கம் நாதமுனி, திருவாரூர் சோழா, தைலம்மை, நடேஷ் அரங்கங்கள் போதும். பார்க்கிங்கில் இருந்து அரங்கம் செல்ல அரைமணியெடுக்கும் தொல்லைகள் வேண்டவே வேண்டாம். அதில் எவ்வளவு அதிகபட்ச திருப்தி கிடைத்தாலும் கூட.


இனி படம்.

உள்ளே சென்ற போது போனில் அருந்ததி தமனுடன் போனில் பேசிக் கொண்டு இருந்தார். பக்கத்தில் இருந்த செல்வினிடம் நடந்தவைகளை கோர்வையாக கேட்டு படத்தினுள் என்னை நுழைத்துக் கொண்டேன்.

கதை எல்லாம் வேண்டாம்.

திரைப்படத்தின் சாதனைகளில் முக்கியமானது க்ளைமாக்ஸ் முன்னர் வரை படம் போரடிக்க வில்லை. புலம்ப வைக்கவில்லை, தம்மடிக்க வெளியில் செல்ல தோணவில்லை.


ஐ படத்தில் சைனா ஏரியாவில் காட்சிப்படுத்தல் சிறப்பாக இருந்தாலும் கதை நகர்வில் ரொம்பவே போரடித்தது. 

இந்த படம் அப்படி இல்லை. காட்சிக்கு காட்சி சிறப்பாகவே நகர்கிறது. அதற்கு அசாத்திய திறமை வேண்டும். வாழ்த்துக்கள் தலைவரே.

நாயகனின் குரல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மெச்சூர்டு மேன்லி வாய்ஸ். ஹாண்ட்சம்மாக இருக்கிறார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அளவுக்கு ஹீரோயிசத்தில் சிறப்பாக செய்திருக்கிறார்.

அருந்ததி நல்ல அழகு (குளோசப் தவிர), நல்லாவே நடிக்கிறார். ஆனால் எக்ஸ்பிரசன்கள் எல்லாமே பத்து மடங்கு இருக்கிறது. காதலுடன் தமன்னிடம் பேசும் போது கண்கள் ஒரு பக்கம் நடிக்க, புருவம், கன்னம் எல்லாம் தனித்தனியாக நடிக்கிறது விஜே போல.


பாலாஜி நகைச்சுவைக்காம், ஒன்னும் சொல்வதற்கில்லை. அவ்வளவு தான் ஆங்ங்.... மென் சோகம் போல் மென் நகைச்சுவையா தலைவரே. நாமெல்லாம் கண்களில் நீர் தளும்ப சிரித்து பழக்கப்பட்டவர்களாச்சே.

முதல் பாதியில் பரபரப்பு தொடங்கும் வரை நாடகத் தொனி தான் தெரிந்தது. பின்னால் இருந்து ஒருவர் சன்டிவியில் சுட்டதா என்று பக்கத்தில் இருந்தவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். 

பாடல்கள் இரண்டு நன்று, பார்க்கவும் சிறப்பு. இடைவேளை வரும் வேளை நம்மை நிமிர்ந்து உட்கார வைத்தது. அடுத்தது காட்சிகள் பரபரவென இருக்குமென நினைத்தேன். ஆனால்.................

சிற்சில குறைகள் இருந்தாலும் படத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன் க்ளைமாக்ஸ் வரை. காப்பிஷாப்பில் வில்லனும் நாயகனும் பேச ஆரம்பித்தது முதல் இறுதி வரை எனக்கு புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை.

துரத்தல் காட்சி தெளிவாக இல்லை. நாயகன், நாயகி ஒரு கார், வில்லன் ஒரு கார், வாடகை கொலையாளி ஒரு பைக், வில்லனை கொல்ல துரத்தும் விஜய் கணேஷ் ஒரு கார் உள்ள காட்சி என்னை குழப்பி விட்டது அல்லது திருப்திபடுத்த வில்லை.

காரில் செல்பவனை பைக்கில் செல்பவன் கொல்லத் துரத்தும் போது காரினால் லேசாக இடித்தாலே பைக் கவிழ்ந்து விடுமே, அதை விடுத்து பயந்து செல்வது ஏன். 

மற்றபடி படம் பார்த்து ரசிக்கும்படியே உள்ளது.

படத்தில் கண்ணியம் குறைவான காட்சிகளே இல்லை என்பது படத்தின் மற்றுமொரு சிறப்பு.

என்னடா ஒரே குறைகளாகவே உள்ளதே என்று நினைக்க வேண்டாம். கண்டிப்பாக போரடிக்காமல் கொடுத்த காசுக்கு ஒர்த்தபிளான படம். நண்பரின் படம் என்பதால் சற்று அதிக உரிமை எடுத்துக் கொண்டேன்.

படத்தின் க்ளைமாக்ஸ் போது செல்வின் ஒரு ட்விஸ்ட் சொன்னார். படத்தின் க்ளைமாக்ஸை விட அது இன்னும் பெட்டராக தெரிந்தது. இருந்தாலும் அதை அவரே அவரது விமர்சனத்தில் சொல்வார் என நினைக்கிறேன்.

தலைவரே ஏதேனும் வார்த்தைகள் எக்குத்தப்பா இருந்தால் மன்னிச்சூ.

ஆரூர் மூனா


Monday 19 January 2015

2014 மற்றும் 2013 புத்தக கண்காட்சி - மீள்பதிவு

இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு செல்லவில்லை, சென்னையில் இருந்தால் எப்படியும் போக வேண்டி வரும் என ஊரிலேயே இருந்து விட்டேன். இருந்தாலும் பதிவு போடாமல் இருக்க முடியுமா, அதான் இந்த மீள் பதிவு

/////////////////////////////////////////////////////
2014 புத்தக கண்காட்சி

புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்து பதிவு போடலன்னா சாமி கண்ணை குத்திடும் என்று எல்லோரும் பயமுறுத்துவதாலும் நேற்று வாங்கிய புத்தகங்களை பட்டியலிடவும் என்று பிலாசபி பிரபா கேட்டதாலும் தான் இந்த பதிவு.
நேற்று முன்தினமே சிவா போன் செய்து சனியன்று மாலை புத்தக கண்காட்சிக்கு வந்து விட வேண்டுமென்றும் பிரபாவையும் செல்வினையும் கூப்பிடுவதாகவும் சொன்னார்.
அதன் படி நேற்று மதியம் வீட்டு வேலைகளை முடித்து விட்டு புத்தக கண்காட்சிக்கு கிளம்ப தயாராக இருந்தேன். தனியாக செல்ல யோசனையாக இருந்தது. நண்பர் போலி பன்னிக்குட்டிக்கு போனடித்தேன். பேச்சுத் துணைக்கு அவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.
வழியில் ஸ்கூல் பையன் போன் செய்து அரங்கினுள் காத்திருப்பதாகவும் வந்து இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 
கண்காட்சி வளாகம் உள்ளே நுழைந்ததும் பிரபாவும் சிவாவும் டீக்கடையில் இருந்தார்கள். அவர்களுடன் சிறிது நேரம் அளவளாவி விட்டு எல்லோரும் அரங்கினுள் நுழைந்தேன்.
--------------------------------------------------
  வாங்கிய புத்தகங்கள்
1, வெள்ளையானை - ஜெயமோகன்
2, கொசு - பா.ராகவன்
3, ஓநாய் குலசின்னம் - ஜியாங்ரோங்
4, பிலோமி டீச்சர் - வா.மு.கோமு
5, நாயுருவி - வா.மு.கோமு
6, திப்புசுல்தான் முதல் விடுதலைப் புலி - மருதன்
7, காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை - ராவ்
8, தலைகீழ்விகிதங்கள் - நாஞ்சில் நாடன்
9, முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - ஜனனி ரமேஷ்
10, மாவோ என் பின்னால் வா - மருதன்
11, கர்ணனின் கவசம் - கே.என். சிவராமன்
12, உப்புநாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
13, எம்,கே. தியாகராஜ பாகவதர் - இரா.செழியன்
14, மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் - மம்முட்டி
15, அண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - முகில்
16, மார்டின் லுதர் கிங் கருப்பு வெள்ளை - பாலு சத்யா
17, சர்வம் ஸ்டாலின் மயம் - மருதன்
18, கலைவாணி ஒரு பாலியல் தொழிலாளியின் கதை - ஜோதி நரசிம்மன்
19, என் வானம் நான் மேகம் - மா. அன்பழகன்
20, கலைந்த பொய்கள் - சுஜாதா
21, விழுந்த நட்சத்திரம் - சுஜாதா
22, கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
23, படிப்பது எப்படி - சுஜாதா
24, 57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம் - வா.மு.கோமு
25, 100 நாற்காலிகள் - ஜெயமோகன்
26, லிண்ட்சேலோஹன் - வா.மணிகண்டன்
27, ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
28, அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
29, எட்றா வண்டிய - வா.மு.கோமு
30, எரியும் பனிக்காடு - பி.எச். டேனியல்
31, மரப்பல்லி - வா.மு.கோமு
32, நளினி ஜமீலா - குளச்சல் மு.யூசுப்

-------------------------------------------------------
எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. புத்தகம் வாங்கத் தொடங்கினால் கண்ணு மண்ணு தெரியாமல் அளவுக்கு அதிகமாக புத்தகங்களை வாங்கி விடுவேன். அதனால் இந்த முறை நிறைய வாங்கக் கூடாது என்பதற்காகவே வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் கைவசம் வைத்திருந்தேன்.
பிரபாவிடம் இந்த வருடம் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். உள்ளே நுழைந்து வெறும் 5 நிமிடத்தில் ஆயிரம் ரூபாயும் காலி. இனனும் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நிறையவே இருந்தது. வேற என்ன பண்றது.
பிறகு எங்கெல்லாம் டெபிட்கார்டு அனுமதியிருக்கிறதோ அங்கெல்லாம் தான் புத்தகங்கள் வாங்கினேன். கிழக்கு பதிப்பகம் மற்றும் டிஸ்கவரி ஸ்டால்களில் ஏகப்பட்ட புத்தகங்களை அள்ளி விட்டேன். 
கிழக்கு பதிப்பகத்தில் வாங்கிக் கொண்டு இருக்கும் போது ரூபக்ராம், கோவை ஆவி, ஸ்கூல் பையன் ஆகியோர் எங்களுடன் இணைந்து கொண்டனர். பிறகு கலாட்டாவுடன் தான் அரங்கஉலா நகர்ந்தது.
நேற்று டிஸ்கவரி ஸ்டாலில் தான் முதன் முறையாக வா.மணிகண்டனை சந்தித்தேன். நான் கூட மற்றவர்களிடம் பேச சற்று தயக்கம் காட்டுவேன். நெருங்கி விட்டால் தான் நம்மைப் பற்றி மற்றவர்களுக்கு புரியும். ஆனால் வா.மணிகண்டன் என்னை கண்டதும் தானாகவே வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு நலம் விசாரித்தார். இந்த பழக்கம் எனக்கு வரமாட்டேங்குதே என்று வருத்தமாக இருந்தது.
அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு அகநாழிகை ஸ்டால் நோக்கி நகர்ந்தோம். வழியில் கேபிளை சந்தித்து விட்டு மணிஜியுடன் சிறிது நேரம் அளவளாவினோம். எட்டு மணிக்கு மேலானதால் சபையை கலைத்து விட்டு கிளம்பினோம்.
தினமும் வந்தால் என் பட்ஜெட் எகிறி விடும். அதனால் வரும் சனிக்கிழமை தான் அடுத்த புத்தக கண்காட்சி விசிட்.
 ------------------------------------------------------
சனிக்கிழமை சிவா, பிரபாவுடன் இணைந்து புத்தக கண்காட்சியில் வேறு எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல் புத்தகங்களை வாங்கினோமா வீட்டுக்கு திரும்புவோமா என்று இருந்தோம். அது போல் பதிவுலக நண்பர்களையும் அதிகம் பார்க்கவில்லை. நாகராஜசோழனுடன் சிறிது நேரம் கலாய்த்து விட்டு பிறகு குடும்பத்தினருடன் சிராஜை பார்த்து அளவளாவி விட்டு ஏரியாவை விட்டு கிளம்பினோம்.
ஞாயிறு அன்று பெரிய ஜமா கூடி விட்டது. நான், செல்வின், சிவா, பிரபா, புலவர் ஐயா, கவியாழி, பாலகணேஷ், ஸ்கூல்பையன், சீனு, ரூபக்ராம், போலி பன்னிக்குட்டி, ஆர்வி.சரவணன், செல்லப்பா மற்றும் பல பதிவுலக நண்பர்கள் ஒன்று கூடி கலாய்த்துக் கலாய்த்து  பொழுது நன்றாக கழிந்தது.
பல மணிநேரங்கள் நடந்து விட்டு ஓய்வெடுக்க ஜீவா சிற்றரங்கு அருகில் அமர்ந்து கொண்டு இருந்த போது 6174வை விட மிக அற்புதமாக அறிவியலையும் நடைமுறை கால இயல்பு வாழ்க்கையையும் இணைத்து ஒரு நாவலை எழுதி வருவதாக செல்வின் தெரிவித்தார். 
அதனைப் பற்றிய விவரங்களை அவரது வாயில் இருந்து பிடுங்க நானும் சிவாவும் ஏகப்பட்ட வார்த்தை ஜாலங்களை காட்டி முயற்சித்தது தோல்வியில் தான் முடிந்தது. 
பிறகு காலச்சுவடு அரங்கிற்கு சென்று கிருஷ்ணபிரபுவை சந்தித்து புத்தங்களைப் பற்றி கேட்டோம். பெருமாள் முருகனின் நிழல் முற்றம் வாங்குங்கள் என்று சொன்னார். "யாரு பெருமாள் முருகன்" என்று கேட்டது தான் தாமதம். மனிதர் காய்ச்சி எடுத்து விட்டார். பெருமாள் முருகன் யாரென்று தெரியாதது ஒரு குற்றமா. அடங்கப்பா.
ஐந்து மணிக்கு புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்று கூடி கும்மாளமிட்டு நிறைவு வேளையில் எல்லோரும் சேர்ந்து குல்ப்பி ஐஸ் வாங்கி சப்பினோம். வாங்கித் தந்த ஆர்.வி. சரவணன் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.
 2014 புத்தக திருவிழாவுக்கு டாட்டா காண்பித்து விட்டு சபையை கலைத்து புறப்பட்டோம்.
  வாங்கிய புத்தகங்கள்
1, அர்த்தமற்ற இந்துமதம் பாகம் 1 - மஞ்சை வசந்தன்
2, அர்த்தமற்ற இந்துமதம் பாகம் 2 - மஞ்சை வசந்தன்
3, கடவுளும் மதமும் ஒழிய வேண்டும் ஏன் - தந்தை பெரியார்
4, சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்
5, பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
6, ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் - தந்தை பெரியார்
7, தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
8, புரோகிதர் ஆட்சி - ந.சி.கந்தையா பிள்ளை
9, சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததேன் - தந்தை பெரியார்
10, கருஞ்சட்டைப் படை - புலவர். பு.செல்வராஜ்
11, இராமாயண பாத்திரங்கள் - தந்தை பெரியார்
12, எழுத்துச் சீர்திருத்தம் - தந்தை பெரியார்
13, தமிழா நீ ஓர் இந்துவா - மஞ்சை வசந்தன்
14, கரையோர முதலைகள் - பாலகுமாரன்
15, கண்ணாடி கோபுரங்கள் - பாலகுமாரன்
16, அறைகள் நிறை உள்ள வீடு - குட்டிரேவதி
17, நிழல் முற்றம் - பெருமாள் முருகன்
18, ஆயிரத்தில் இருவர் - சுஜாதா
19, பெண் இயந்திரம் - சுஜாதா
20, தண்ணீர் - அசோகமித்திரன்
21, ஆதலினால் காதல் செய்வீர் - சுஜாதா
22, அனிதா இளம் மனைவி - சுஜாதா
23, வெல்லிங்டன் - சுகுமாரன்
24, அனிதாவின் காதல்கள் - சுஜாதா
25, பாதி ராஜ்யம் - சுஜாதா
26, ஒரு விபத்தின் அனாடமி - சுஜாதா
27, மாயா - சுஜாதா
28, காயத்ரி - சுஜாதா
29, விதி - சுஜாதா
30, மேற்கே ஒரு குற்றம் - சுஜாதா
31, மேலும் ஒரு குற்றம் - சுஜாதா
32, உன்னைக் கண்ட நேரமெல்லாம் - சுஜாதா
33, மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
34, அம்மன் பதக்கம் - சுஜாதா
35, மெரீனா - சுஜாதா
36, புகார்... புகார்... புகார்... - சுஜாதா
37, ஐந்தாவது அத்தியாயம் - சுஜாதா
38, தமிழ் சினிமாவின் பொக்கிஷம் - பிலிம் நியுஸ் ஆனந்தன்
39, பேரறிவாளனின் உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம் - டிவிடி
40, அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால் - அனுஸ்ரீ
41, இலக்கியம் மாறுமா - அ.ஞா. பேரறிவாளன்
 /////////////////////////////////////////////////////////////

2013 புத்தக கண்காட்சி

இந்துவா பொறந்தவன் கோயிலுக்கு போகலைனா தெய்வகுத்தம்னு சொல்றது போல பதிவெழுதுறவங்கன்னா புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்து பதிவா போடனும். கூடவே வாங்கின புத்தகங்களின் லிஸ்ட்டையும் விலையுடன் பகிரனும். இல்லைனா பிரபல(?) பதிவர்னு ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.


ஆனா எல்லாப் பதிவர்களின் புத்தக கண்காட்சி பதிவையும் படித்துப் பார்த்தால் ஒரே டெம்ப்ளேட் தான். நானும் அதே போல் எழுவில்லையென்றால் ஆடையில்லாதவன் ஊர்ல கோவணம் கட்டுனவன் பைத்தியக்காரன்கிற மாதிரி என்னையும் ஒதுக்கிடுவாங்களோன்னு பயத்துல தான் இந்த பதிவு.

என்னடா தலைப்புல என்னன்னவோ விஷயங்கள் இருக்கிற மாதிரி இருக்கு, ஆனா பதிவுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமுமில்லையேன்னு நினைக்கிறவங்க புத்திசாலிகள், வருங்காலத்தில் பிலாசபி பிரபாகரன் அளவுக்கு வம்பு வளர்க்கும் பதிவரா வளர வாய்ப்பிருக்கிறது. இப்பதிவின் தலைப்பு உங்களுக்கு வீடுதிரும்பல் ப்ளாக்கை நினைவுபடுத்தினால் நிர்வாகம் பொறுப்பல்ல.


தமிழ் டைப்பிங், பதிவை படிக்கிறது, பதிவை சுவைபட எழுதுவது போன்ற விஷயமெல்லாம் இரண்டு வருடத்திற்குள் தெரிந்த விஷயம். ஆனால் எனக்கு படிப்பது என்பது சிறுவயதில் இருந்தே ஊறிய விஷயம். எனக்கு தெரிந்து 2002ம் ஆண்டிலிருந்தே புத்தக கண்காட்சிக்கு வந்து கொண்டு இருக்கிறேன். அப்பொழுது காயிதே மில்லத் கல்லூரியில் நடந்து கொண்டு இருந்தது.

அப்பொதெல்லாம் எனக்கு கண்காட்சிக்கு வருபவர்களில் நிறைய பேரை தெரியாது. ஆனால் இன்றோ ஒரு வரிசைக்கு ஒருவர் தெரிந்தவராக மாட்டுகிறார்கள். அதிலும் முக்கால்வாசி பேர் பதிவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.


இதற்கு முன்பு நடந்த கண்காட்சிகளில் எல்லாம் என்னுடைய அக்காமார்கள், மற்றும் தமிழாசிரியர்கள் எனக்கு நல்ல புத்தகம் என்று அறிமுகப்படுத்திய புத்தகங்களையெல்லாம் வாங்கி விட்டேன், பிறகு சிறந்த நாவலாசிரியர்கள் என்று நான் நினைக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாங்கியாகி விட்டது.

இந்த வருடம் வாங்குவதற்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லை. விமலாதித்த மாமல்லன் எழுதிய சின்மயி விவகாரம் மற்றும் நண்பர் பாலகணேஷின் சரிதாயணம் மட்டும் வாங்கினால் போதும் பர்சை அவிழ்க்கவே கூடாது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் கண்காட்சி உள்ளே நுழைந்ததும் காஞ்சமாடு கம்புல புகுந்தது போல நிறையவே புத்தகங்களை வாங்கி விட்டேன். எல்லாவற்றிற்கும் காரணம் கவர்ச்சிகரமான தலைப்பு மட்டுமே.


கூடுதலாக இரண்டு சாப்ட்வேர் தமிழ்வழிக் கல்வி சிடிக்களை வாங்கினேன். போட்டோஷாப் மற்றும் வெப்டிசைனிங் தான் அவை. நேற்று போட்டோஷாப் சிடியை போட்டுப் பார்த்தேன், ஓரளவுக்கு புரிந்தது. இதை வைத்து இரண்டிலும் புகுந்து பார்த்து விட வேண்டியது தான்.

படித்து பார்த்தால் தான் இந்த புத்தகங்களின் தரம் புரியும். மீனாட்சி புத்தக நிலையத்தில் புகுந்து சுஜாதாவின் புத்தகங்களை கன்னாபின்னாவென்று வாங்கி விட்டேன், வீட்டிற்கு வந்து புரட்டிப் பார்த்தால் தான் தெரிகறது. ஏற்கனவே என்னிடம் இருந்த பல சுஜாதாவின் தொகுப்புகளில் இந்த நாவல்கள் இருக்கிறது என்று. எல்லாம் படித்த நாவல்கள்.

ராஜூ முருகனின் வட்டியும் முதலும் எனக்கு மிகவும் பிடித்த தொடராக இருந்தாலும் ஏற்கனவே எல்லா பகுதியையும் படித்து விட்டதால் வாங்க ஆர்வம் காட்டவில்லை. அடுத்த முறை கண்காட்சிக்கு செல்லும் போது படித்ததெல்லாம் மறந்திருக்கும், அப்பொழுது வாங்கி கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு நாட்கள் பதிவுலக நண்பர்களோடு அளவளாவி கூத்தடித்தது நல்ல அனுபவம். நட்புகளை மேலும் நெருக்கமாக்கியது. நேற்று நானும் மெட்ராஸ் பவன் சிவாவும் சென்று பார்த்தால் ஒரு பதிவரையும் காணவில்லை. போரடிக்கவே அங்கிருந்து காமராஜர் அரங்கிற்கு கிரேசி மோகனின் கிரேசி கிஷ்கிந்தா நாடகத்திற்கு ஜூட் விட்டோம்.

பைக்கை எடுத்து வெளியில் வருவதே பெரும்பாடாகி விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் போக்குவரத்து காவலர்கள் கார்களை உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். எப்படியும் ஆயிரம் கார்களுக்கு மேல் உள்ளே வரமுடியாமல் திரும்பி விட்டனர்.

நிர்வாகத்தினர் அடுத்த முறையாவது ஒழுங்கான இடத்தை தேர்வு செய்தால் வரும் மக்கள் நிம்மதியாக வந்து புத்தகங்களை பார்த்து வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும். போதும் ரொம்பவே பேசியாச்சு.

இனி பதிவர் மரபுப்படி நான் வாங்கிய புத்தகங்களின் லிஸ்ட்டை கொடுக்கிறேன். அதில் சிறந்த புத்தங்களாக நான் நினைப்பதின் விமர்சனங்களை பகிர்கிறேன்.

தூக்கு கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுச்சாமி - விலை ரூ.200/-

மரப்பசு - தி.ஜானகிராமன் - விலை ரூ.100/-

வீடு கனவு இல்லத்துக்கான கைடு - தாஸ் - விலை ரூ.125/-

சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் - விமலாதித்த மாமல்லன் - விலை ரூ.120/-

9/11 மாபெரும் சதியின் பின்னணி - பா.ராகவன் - விலை ரூ.150/-

தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி - விலை ரூ.250/-

வெளிச்சத்தின் நிறம் கருப்பு  மர்மங்களின் சரித்திரம் - முகில் - விலை ரூ.200/-

மோஸாட் இஸ்ரேலிய உளவுத்துறை - என்.சொக்கன் - விலை ரூ.110/-

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் - எஸ்.ராமக்கிருஷ்ணன் - விலை ரூ.225/-

அரவாணிகள் - மகாராசன் - விலை ரூ.210/-

சம்பிரதாயங்கள் சரியா - மஞ்சை.வசந்தன் - விலை ரூ.40/-

உடலினை உறுதி செய் - சி.சைலேந்திரபாபு - விலை ரூ.120/-

தோல் - டி.செல்வராஜ் - விலை ரூ.400/-

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - பா.ராகவன் - விலை ரூ.110/-

அமெரிக்க உளவுத்துறை FBI ரகசியங்கள் - என்.சொக்கன் - விலை ரூ.110/-

ISI நிழல் அரசின் நிஜ முகம் - பா.ராகவன் - விலை ரூ.120/-

கொலம்பிய போதை மாபியா - பா.ராகவன் - விலை ரூ.140/-

கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு - ராமன் ராஜா - விலை ரூ.220/-

தரணிகண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர் - எ.சங்கர்ராவ் - விலை ரூ.150/-

பாட்ஷாவும் நானும் சுரேஷ்கிருஷ்ணா - விலை - ரூ.125/-

போட்டோஷாப் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-

வெப்டிசைனிங் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-

21ம் விளிம்பு - சுஜாதா - விலை ரூ.43/-

உயிராசை - சுஜாதா - விலை ரூ.22/-

24ரூபாய் தீவு - சுஜாதா - விலை ரூ.24/-

60 அமெரிக்க நாட்கள் - சுஜாதா - விலை ரூ.24/-

கமிஷனருக்கு கடிதம் - சுஜாதா - விலை ரூ.19/-

வடிவங்கள் - சுஜாதா - விலை ரூ.22/-

விபரீதக் கோட்பாடு - சுஜாதா - விலை ரூ.20/-

நீர்க்குமிழிகள் - சுஜாதா - விலை ரூ.11/-

ஓடாதே சுஜாதா - விலை - ரூ.24/-

சரிதாயணம் - பாலகணேஷ் - விலை ரூ.60/-

நோயினை கொண்டாடுவோம் - நம்மாழ்வார் - விலை ரூ.15/-

கடவுளும் மனிதனும் - தந்தை பெரியார் - விலை ரூ.10/-

இது தான் மகாமகம் - தந்தை பெரியார் - விலை ரூ.3/-

புரோகிதர் ஆட்சி - கந்தையா பிள்ளை - விலை ரூ.12/-

யார் இந்த இராமன்? - அறிவரசன் - விலை ரூ.12/-

அய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள் - திக வெளியீடு - விலை ரூ.12/-

சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார் - விலை ரூ.15/-

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - திக வெளியீடு - விலை ரூ.10/-

சோதிட ஆராய்ச்சி - தந்தை பெரியார் - விலை ரூ.15/-

கடவளர் கதைகள் - சாமி - விலை ரூ.12/-

செயின்ட் கிட்ஸ் வழக்கும் பொது வாழ்க்கையும் - கி.வீரமணி - விலை ரூ.10/-

பலிபீடம் நோக்கி - கலைஞர் மு.கருணாநிதி -விலை ரூ.8/-

திராவிடர் ஆரியர் உண்மை - தந்தை பெரியார் - விலை ரூ.5/-

ஆர்.எஸ்.எஸ் பற்றி - கி.வீரமணி - விலை ரூ.8/-

பேய் பூதம் பிசாசு அல்லது ஆவிகள் - திக வெளியீடு - விலை ரூ.20/-

திருக்குர்ஆன் - திருக்குர்ஆன் அறக்கட்டளை - இலவசம்

அம்மா நீ வருவாயா - கவியாழி கண்ணதாசன் - இலவசம்


----------------------------

ஆரூர் மூனா

Saturday 3 January 2015

கடுப்பேத்திய ஆன்மீக பயணம்


போன திங்களன்று தஞ்சாவூர் மாரியம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் போயிருந்தேன். நான் பிறந்து 2 மாதத்திலேயே கோயிலுக்கு தூக்கிட்டு வந்தார்களாம். எனது 12 வயது வரை மாதம் ஒரு முறை கோயிலுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கமாக இருந்தது. அப்புறம் நான் போவதை தவிர்த்து விட்டேன். அப்பா சொல்லிப் பார்த்து நான் கோயிலுக்கு போவதேயில்லை என்பதால் விட்டு விட்டார்.


இந்த முறை 80 வயதான எங்க மாமா ஒருத்தர் ரயிலில் இருந்து தவறி விழுந்து தொடை எலும்பு முறிந்து விட்டது. மருத்துவமனையில் இருக்கும் அவரை பார்க்க செல்ல முடிவெடுத்த போது போகும் வழியில் கத்திரிநத்தம் கிராமத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கும், மாரியம்மன் கோயிலுக்கும் செல்வதாக குடும்பத்தார் பெரும் திட்டம் தீட்டினர்.

அம்மா நான் பிறந்தவுடன் மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றதால் முல்லையையும் அழைத்து செல்ல வேண்டும் என உறுதியாக சொல்லி விட்டார். போனோம். எனக்கு தான் நிம்மதி போச்சு.

அது என் ஏரியா கோயில். சிறு வயது முதல் பிரகாரங்களில் விளையாடி இருக்கிறேன். கடவுள் நம்பிக்கை என்பது வேறு. பழகிய கோயில் என்பது, சொந்த ஊருக்கும் வீட்டுக்கும் சமம். ஆனால் அது இன்று பணம் பிடுங்கி கோயிலாக மாறி விட்டது.


வக்காளி எல்லாத்துலயும் ப்ராடுத்தனம். திருட்டு, வெளங்குமாடா இது. உள்ளே நுழைந்தவுடன் அர்ச்சனை சீட்டுக்கு 5 ரூவா கேட்டானுங்க. சீட்டை வாங்கிப் பாத்தா இரண்டு நாளுக்கு முன் தேதியிட்ட பழைய சீட்டு, என்னாங்கடா பழைய சீட்டை கொடுத்து ஏமாத்துறீங்கன்னு சண்டைக்கு போனா எங்கப்பா என்கிட்ட சண்டைக்கு வர்றாரு, கோயிலுக்கு உன் கூட வந்தாலே ப்ரச்சனை தானான்னு.

அதை அப்படியே விட்டுட்டு உள்ளே போனா ஒரு பூணூல் போட்ட அய்யர் பையன் ஒருத்தன் என் குடும்பத்தை ஒரு பிள்ளையார் முன் நிறுத்தி பெரிய அர்ச்சனை பண்ணான். எனக்கு புரியலை. அப்புறம் பார்த்தா இது போல் மாதாமாதம் அர்ச்சனை பண்ணி உங்கள் வீட்டுக்கு பார்சல் அனுப்புகிறோம். ஐயாயிரம் கொடுங்கள் என்று மார்க்கெட்டிங் பண்ணினான்.

அவனுக்கு ஏகப்பட்ட வசவுகளை கொடுத்து யோசித்துக் கொண்டே வந்தேன். கண்டிப்பா லோக்கல் ஆளுகளுக்கு இந்த அர்ச்சனை மேட்டரை சொல்ல மாட்டான். என்னைப் பாத்தா வெளியூர்க்காரன் மாதிரியா தெரியுது. நம்ம மூஞ்சி பக்கா திராவிட முகமாச்சேன்னு.

உள்ளே போனால் அர்ச்சனை செய்யும் அய்யர் பூஜை முடித்ததும் கூச்சமேயில்லாமல் தட்சணை கொடுங்கள் என்று வாய் விட்டு கேட்கிறான். பிச்சையா என்று கேட்டேன். எங்கப்பா என்னை தள்ளிக் கொண்டு வெளியில் வந்தார். தலையில் அடித்துக் கொண்டு உனக்கு அறிவேயில்லையா, அது இதுன்னு திட்ட ஆரம்பித்து விட்டார்.

வாயை மூடிக்கிட்டு வண்டியை எடுத்தேன். அடுத்ததா போனது காளஹஸ்தீஸ்வரர் கோயில், மாரியம்மன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கிறது கோயில். ஆயிரம் ஆண்டு பழமையான கோயில். ஆன்மீகவாதிகளுக்கு ஒரு தகவல். திருப்பதிக்கு அருகில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான கோயிலாம் அது. அங்கு செய்யப்படும் பரிகாரங்களுக்கு இணையாக இங்கும் செய்யப்படுகிறது.

கூட்டமே இல்லை. நான் நிம்மதியாக சென்று வந்தேன். கோயில்னா நிம்மதி கொடுக்கனும், கெடுக்கக் கூடாது. வணிகமாகிப் போன ஆன்மீகம், கெடுக்கும் வேலையை தான் செய்து வருகிறது. திருவாரூர் கோயில் கூட புராதனமானது. அதன் முக்கிய கடவுள்கள் தியாகராஜரும், வன்மீகநாதரும் தான். ஆனால் இப்போது இந்து அறநிலையத்துறை இந்த கோயில் சர்வதோஷ பரிகார ஸ்தலம் என்பதை கையில் எடுத்து விளம்பரம் செய்து வருகிறது.

பிரச்சனைகளில் இருந்து எந்த கடவுள் விடுவிக்கிறதோ அதைத்தான் நாம் அதிகம் கும்பிடுகிறோம். இப்போது அதனை பயன்படுத்தி தான் இன்று ஆன்மீகம் வியாபாரமாகி வருகிறது.

உஷராகிக்கவும் மக்களே.

ஆரூர் மூனா