Monday 13 July 2015

ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 10

ரயில்வேயில் இப்போது  BE மற்றும் Diploma முடித்தவர்களுக்கு இளநிலை பொறியாளர் மற்றும் முதுநிலை பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நேரம் என்பது அனைவரும் அறிந்ததே.


வெறுமனே விண்ணப்பித்து விட்டு நாமே படித்து தேர்ச்சி பெற்று விடலாம் என நினைத்து அசிரத்தையாக இருந்து விட வேண்டாம். போட்டி கடுமையாக இருக்கும். விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கையும் இந்திய அளவில் இருப்பதால் கண்டிப்பாக இதற்காக நீங்கள் உழைக்க வேண்டும்.

இதற்கென பயிற்சி நிலையங்கள் சென்னையில் அண்ணாநகர் மற்றும் தி நகரில் நிறைய இருக்கின்றன. அவற்றில் தகுதியாக பயிற்சி நிலையத்தை தேர்ந்தெடுத்து சேர்ந்து படியுங்கள். அவர்கள் தரும் மாதிரி தேர்வுகள் உங்களை மெருகேற்றும். தேர்வு பற்றிய புரிதலை உண்டாக்கும். 


எனக்கு தெரிந்து ஆந்திராவில் உள்ள நண்பர்கள், அவர்களின் உறவினர்கள் அது போல் உள்ள பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படித்துக் கொண்டு இருக்கின்றனர். என்னால் முடியும், நானே படித்து தேர்ச்சி பெறுவேன் என்று நினைப்பது சற்று சிரமத்தை தான் உண்டாக்கும். 

நண்பர்ளே, தேர்ச்சி பெற்று ரயில்வேயில் பொறியாளர் ஆக வாழ்த்துக்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எங்களது அலுவலகத்தில் ரயில்வே பற்றிய ஆவணங்கள் உள்ளது. அவற்றில் இருந்து கிடைத்த சில துணுக்குகள். சில ஆச்சரியம் தருகிறது.

GT Express என்பது Madras and southern Mahratta Railway ஆல் 1929 அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த வடமேற்கு எல்லைப் புறமாகாணத்தின் தலைநகராக இருந்த பெஷாவரிலிருந்து அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த மங்களூருக்கும் இடையே இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப் பட்டது. 

இந்த ரயில், இந்த தொலைவை எடுத்துக் கொண்ட நேரம் 104 மணிநேரம். சுதந்திரத்திற்கு பிறகு இறுதியாக புது தில்லியிலிருந்து சென்னை வரை செல்லும் ரயிலாக மாற்றப்பட்டது.

----------------------------------------------------

Boat Mail என்பது தனுஷ்கோடி தலைமன்னார் மார்க்கம் 1914ல் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின் போட் மெயில் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை இயக்கப்பட்டது. தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை கப்பலிலும், தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரை இலங்கை ரயிலிலும் செல்ல வேண்டும். 

தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் செல்லும் தொலைவு 35 கிமீ. 1964 வீசிய புயலில் தனுஷ்கோடி மூழ்கி விட்டதால் இந்த ரயில் நிறுத்தப்பட்டு ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்டது.

----------------------------------------------------

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் 02.04.1931 முதல் இயக்கப்பட்டது.

----------------------------------------------------

எழும்பூர் ரயில் நிலையம் 

எழும்பூர் ஒரு காலத்தில் வெடி பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்காக இருந்தது. எழும்பூர் ரயில் நிலையம் 2.5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதில் 1.8 ஏக்கர் Dr. Paulandy (உண்மையில் அவரது பெயர் Dr. Palanyandi) என்பவரிடமிருந்து South Indian Railway Companyஆல் வாங்கப்பட்டது. பிறகு இங்கிலாந்திலிருந்து ஹென்றி இர்வின் என்ற சீப் இஞ்சினியர்  மற்றும் E.C. Bird என்ற ஆர்க்கிடெக்ட் ஆகியோரை வரவழைத்து வடிவடிவமைக்கப்பட்டது. 

செப்டம்பர் 1905ல் தொடங்கப்பட்டு 1908ல் முடிக்கப்பட்டு ஜுன் 11 1908 அன்று எழும்பூர் ரயில் நிலையம் தொடங்கப்பட்டது. கரயில் நிலையத்தை காண்ட்ராக்ட் எடுத்து கட்டியவர் பெங்களூரை சேர்ந்த சாமிநாதப் பிள்ளை. ரயில் நிலையத்தை கட்டி முடிக்க ஆன செலவு ரூ 17,00,000/-.

----------------------------------------------------

சுல்தான், சிந்த் மற்றும் சாஹிப் 1853-ல் முதன் முதலில் இயக்கப்பட்ட ரயிலை இழுத்த 3 ஸ்ட்ரீம் என்ஜினின் பெயர்கள்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment