Saturday 12 December 2015

*****டை என்பது பீப் வார்த்தையா

கெட்ட வார்த்தையெல்லாம் இருக்கும். படிக்கனுமான்னு யோசிச்சிங்கனாக்கா அப்படி ஸ்கிப் பண்ணிட்டு எஸ்கேப்பாகிடுங்க.

நமக்குன்னு ஒரு வட்டம் போட்டுக்கிட்டு நாம தான் அதுல ராஜாவா இருப்போம். அது மாதிரி வேலை செய்யிற இடத்துல சக பணியாளர்கள், உயரதிகாரிகள் ஆகியோர் என்னை சுத்தி ஒரு வட்டம் போட்டு அதில் என்னை கருத்து கந்தசாமியாக்கி வைத்து இருக்கிறார்கள். 


நாட்டில் நடக்கும் எல்லா நிகழ்வுக்கும் என்னிடம் கருத்து கேட்பார்கள். நான் என் கருத்தை சொல்லனும். அதை செத்தவன் கையில வெத்தலப் பாக்கு கொடுத்தவன் மாதிரி சொல்லக் கூடாது. உணர்ச்சிகரமா ஏத்த இறக்கத்துடன் சீமான் மாதிரி கை முஷ்டியை உயர்த்தி தான் சொல்லனும்.

சில நிகழ்வுகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. எனக்கு அதைப் பற்றிய அறிவும் கிடையாது. என்ன விஷயம்னு கூட தெரியாது.ஆனாலும் என் ரசிக வட்டத்தினர் என் கருத்து தான் உறுதியானது, இறுதியானது என்று நம்பி கேட்பார்கள், நான் சொல்லி தான் ஆகனும். இல்லைனா என்னை சரக்கில்லாதவன் என்று நம்பி விடுவார்கள் என்று நானே நினைத்துக் கொள்வதால் தெரியாத விஷயத்தில் கூட எதையாவது  சொல்லி வைப்பது வழக்கம்.

சிம்பு அனிருத் பீப் பாடல் மேட்டரில் கருத்து சொல்ல எனக்கு விருப்பமும் கிடையாது. சொல்வதற்கு கருத்தும் கிடையாது. அது அவன் வார்த்தை, அவன் துட்டு, அவன் கொழுப்பு பாடிட்டு போயிட்டான். அதை கண்டுக்காம விட்டாலே அதுவா குப்பைத் தொட்டிக்கு போயிருக்கும். எதிர்ப்பு தெரிவிக்கிறேன் பேர்வழின்னு ஆளாளுக்கு பார்வேர்ட் பண்ணப் போக செம வைரலாகிடுச்சி.


நேத்து என் ரசிக வட்டம் என்னை சுற்றிக் கொண்டு கருத்து கேட்டது, என்ன சொல்றதுன்னு தெரியலை. ஏன்னா என்கிட்ட கருத்தே இல்லை. ஆனாலும் அந்த குரூப்பை உக்கார வச்சி அரைமணிநேரம் பிரசங்கம் பண்ணினேன். கிரேட்ப்பா என்று பாராட்டி கூட்டம் கலைந்தது. 

வீட்டுக்கு வந்து யோசிச்சி பார்த்தேன். வார்த்தைகள் ஏரியாவுக்கு ஏரியா வித்தியாசப்படும். நாம அதற்குள் அடாப்ட் ஆகிக்கனும். இல்லைனா அது பெரிய பிரச்சனையாகிடும். 

ஒக்காலஓழி என்று ஒரு வார்த்தை எங்கள் தஞ்சாவூர் பக்கத்தில் இயல்பாக புழங்கப்படும் வார்த்தை எனக்கு 5 வயசு இருக்கும் போது என் தாத்தாவின் செட்டு நண்பர்களுக்கு நாங்கள் பட்டப் பெயர் வைத்திருப்போம். 

ஒருத்தர் பெயர் வெத்தல டப்பா, ஒருத்தர் களத்துபம்புசெட்டு தாத்தா. அது போல் ஒருத்தரின் பெயர் ஒக்காலஓழி தாத்தா. வாயத்தொறந்தா யாரை வேண்டுமானாலும் அப்படி தான் வசவுவார். பாசத்திலும் சரி, கோவத்திலும் சரி. 

அந்த வயசுல எனக்கு அந்த வார்த்தை தப்பாவும் தெரிஞ்சதில்லை. ஆனா ஒரு சமயம் திருநெல்வேலி போயிருந்தப்போ என் மாமா யாரையோ அப்படி திட்ட அவன் எங்க மாமாவை தெருவில் பொரட்டிப் போட்டு அடித்தான். அவருக்கு செம காயம். அப்புறம் விசாரித்த போது தான் தெரிந்தது .அந்த பகுதிகளில் அந்த வார்த்தையை சொன்னால் கொலை விழுமாம்.

பள்ளிப் படிப்பு முடிக்கும் வரை ஓத்தா என்று யாராவது சொன்னால் அவனை அப்படியே புறந்தள்ளி விடுவேன். நட்பும் கிடையாது. மயிறும் கிடையாது. அப்படி ஊருக்குள்ள இருந்தாச்சு. ஊர்ல கெட்ட வார்த்தை என்பது முட்டாப்*** , ஒ***க்ககு***க்கி, பேப்பு*** அவ்வளவு தான். 

சென்னைக்கு படிக்க வந்த புதிதில் இந்த வார்த்தையை தவிர்க்கவே முடியாமல் சங்கடப் பட்டேன். ஒம்மால என்பது இன்னும் நாராசமா இருந்தது. ஆனால் இரண்டாவது வருடம் ஒத்தா, ஒம்மால என்பது சர்வசாதாரணமாக என் வாயில் ஒட்டிக் கொண்டது. 

எந்த சொற்றொடருக்கும் முன்னால் இந்த இரண்டும் தான் முன் பின் நிற்கும். ஓத்தா என்று ஒருத்தன் என்னைப் பார்த்து சொன்னதற்காக முதல் வருடத்தில் அவனை தொரத்தி  தொரத்தி அடித்தது தான் நினைவுக்கு வந்தது.

தெவிடியாப் பையா என்பது இருப்பதிலேயே மோசமான கெட்ட வார்த்தை. ஊர்ப்பக்கம் ஒருத்தன் இந்த வார்த்தையை பிரயோகித்தால் மவனே அருவா வெட்டு தான். வீட்டை எரிச்சதும் என் கண்முன் நடந்திருக்கு. 

ஆனால் தெவிடியாப் பையா என்ற வார்த்தை என்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கு இடையே சர்வ சாதாரணமாக புழங்குகிறது. கூட வேலை செய்பவன் ஒரு சின்ன தவறு செய்தால் கூட தெவிடியாப் பையா என்ற ஆசீர்வாதம் தான் கிடைக்கும். குடிக்கும் போது தண்ணியை கொஞ்சம் குறைத்து ஊத்துனா தெவிடியாப் பையா இத்தனை நாளா சரக்கடிக்கிற இன்னும் தண்ணி ஊத்தத் தெரியலையா என்பார்கள்.

அய்யா என்பது நல்ல மரியாதையான தமிழ் வார்த்தை. சார் என்பதை விட அய்யா என்று பழகுவது தான் மரியாதை என்று என் தமிழ் வாத்தியார் சொல்லிக் கொடுத்தார். ஆனால் சென்னையில் ஒரு ஆட்டோக்காரனை பார்த்து  அந்த இடத்துக்கு வர்றியாய்யா என்று சொல்லிப் பாருங்கள். அவன் கெட்ட வார்த்தைகளின் உச்சத்தில் ஏறி தலையில் நிற்பான். 

இப்படியே வார்த்தைகள் புழங்கி புழங்கி எது நல்ல வார்த்தை எது கெட்ட வார்த்தை என்பது புரியாமல் போயிடுச்சி. இந்த லட்சணத்துல சிம்பு பாட்டைப் பத்தி நான் எங்கேயிருந்து கருத்து சொல்றது. 

நீங்களே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்கங்க.

ஆரூர் மூனா

5 comments:

  1. Innnum irukku niraya nalla vaarthaigal
    konjam madura pakkam vaangappu kathu thaarom

    ReplyDelete
    Replies
    1. அய்யா, எனக்கு பேசத் தெரியாதுன்னு நான் சொல்லலை. ஒரு ஊர்ல பெரிய கெட்ட வார்த்தையா தெரிவது, இன்னொரு ஊர்ல சகஜமா புழங்கப்படுதுன்னு தான் சொல்ல வந்தேன். நாம எப்பவும் பீப் பீப்னு பேசுற ஆளுங்க தான்.

      Delete
  2. you have not said anything about recent flood havoc

    ReplyDelete
    Replies
    1. அய்யா, அதைப் பற்றி நிறைய பேசியாச்சி. அனுபவிச்சாச்சி. போதும் இப்ப வேணாம். நான் ஒரு பதிவில் நிதானமாக பதிவிடுகிறேனே.

      Delete