Friday 18 March 2016

புகழ் - சினிமா விமர்சனம்

படத்தின் முதல் காட்சியிலேயே நான் யுகித்த விஷயம் இது நெடுநாள் கிடப்பில் இருந்த படம் என்பது தான். அதை நேக்கா மறைத்து படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி முகம் பிஞ்சாக இருக்கிறது என்பதை வைத்தே படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தை அனுமானிக்கலாம்.

முழு வீடியோ விமர்சனம் பார்க்க 



ஒரு சாமானிய இளைஞனுக்கும் ஒரு அமைச்சருக்கும் மைதானத்தை அபகரிப்பது தொடர்பாக ஏற்படும் மோதலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே புகழ் படத்தின் ஒன்லைனர்.

வாலாஜாபேட்டை என்பது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம். அங்குள்ள வாலிப பசங்களுக்கு ஒரு மைதானமே பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது. அந்த இடத்தில் பயற்சி செய்து அதன் மூலம் அரசு வேலை கிடைக்கப் பெற்றவர்கள் அனேகம் பேர்.


அந்த இடத்தை உள்ளூர் நகர மன்ற சேர்மன் உதவியுடன் வளைத்து போட நினைக்கிறார் அமைச்சர். அதனை தடுக்கிறார் ஜெய். உள்ளூர் மக்களிடையே நல்லபெயர் இருக்கும் ஜெய்க்கு வாலிப பசங்க பட்டாளமே பின்நிற்கிறது. 

மைதானத்தை யார் கைப்பற்றினார்கள் என்பதே புகழ் படத்தின் கதை.

இதே ப்ளாட்டில் தெலுகில் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படம் 10 வருடங்களுக்கு முன்பே வந்துள்ளது. ஷை என்ற அந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலி, இன்று வரை நான் பார்த்த மிகச் சிறந்த ஸ்போர்ஸ் மூவிகளில் இதுவும் ஒன்று.

சிறு நகரங்களுக்கு இது போன்ற பொழுதுபோக்கு இடங்கள் ஊருக்கு ஒன்று தான் இருக்கும் திருவாரூரில் பெரிய கோவில், மன்னார்குடியில் பின்லே மைதானம் என எங்கள் ஏரியாவில் கூட இது மாதிரி செண்ட்டிமெண்ட் இடங்கள் உண்டு.


படத்தின் குறையே மைதானத்திற்கும் நாயகனுக்குமான பிணைப்பை காட்சிப் படுத்த தவறி விட்டார். சும்மா உட்கார்ந்து கதையடிக்கவும் ராத்திரிக்கு சரக்கடிக்கவும் மட்டுமே நாயகன் அந்த இடத்தை பயன்படுத்துகிறார். இன்னும் சற்று நம்பகத்தன்மையுடனும் நெகிழ்ச்சியுடனும் காட்சி அமைத்திருந்தால் நாமும் படத்துடன் பயணித்து இருப்போம். 

ஜெய் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு என்ன பாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதை செவ்வனே செய்து முடித்து இருக்கிறார். சில இடங்களில் மட்டும் அட போட வைக்கிறார். சுரபிக்கும் அவருக்கும் காதல் மலரும் இடங்களில் நன்றாக நடித்துள்ளார்.

சுரபி படத்திற்கு உண்மையிலேயே மைனஸ் தான். இவன் வேற மாதிரி படத்திற்கும் இந்த படத்திற்கும் கம்பேர் செய்தோமானால் கன்றாவியாக இருக்கிறார். நம்ம ஆட்களுக்கு சற்று ச்சப்பியாக இருந்தால் தான் பிடிக்கும். உடலை குறைக்கிறேன் என்று கன்னத்தை டொக்கி வைத்திருக்கிறார். ஹீரோயின் லுக்கே வரமாட்டேன் என்கிறது.


கருணாஸ் சிடுசிடுவென விழுந்து கொண்டே இருக்கும் பாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். எப்பொழுதும் தம்பியை கண்ட்ரோலில் வைத்து அடக்கிக் கொண்டே இருப்பவர் ஒரு காட்சியில் மாரிமுத்து ஜெய்யை கொன்று போட்டு விடுவதாக மிரட்ட ஜெய்யை முன் இழுத்து விட்டு முடிந்தால் வெட்டிப் பார் என்று பொங்கும் காட்சியில் கைதட்டல் வாங்குகிறார்.

வழக்கம் போலவே ஒன்லைனர்களில் ஆர்ஜே பாலாஜி கவனம் ஈர்க்கிறார். ஜெய்யின் நண்பர்களாக வருபவர்களில் சிலர் கவனிக்க வைக்கின்றனர் .முக்கியமாக அந்த கவுன்சிலர் நண்பர். 

கவனிக்க தக்க அறிமுகம் கவிஞர் பிறைசூடன், கம்யுனிஸ்ட்டாக வருகிறார். எல்லா ஊர்களிலும் ஊருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் வறுமையில் வாடும் வயதான கம்யுனிஸ்ட்கள் பாத்திரத்தை சரியாக செய்துள்ளார்.

படத்தின் பெரும்குறை முதிர்ச்சியில்லாத இயக்கம் தான். காட்சிக்கும் காட்சிக்கும் லிங்க்கே இல்லை. ஜம்ப் அடிக்கிறது. அது போல் ஒரு காட்சிக்கும் நிறைவு இல்லை, எல்லாமே தொங்கலில் இருக்கிறது. படத்தில் நிறைய ஏன்கள் தொக்கி நிற்கிறது. 

ஒன்னும் அவசரமே இல்லை, என்றாவது டிவியில் போடும் போது பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி

ஆரூர் மூனா

1 comment:

  1. ரைட்டு...டிவியில் போடும் போது பார்த்துக் கொள்கிறோம்...

    ReplyDelete