Monday 7 March 2016

பள்ளிப்பாளையம் சிக்கன்

வீட்டில் தங்கமணி ஊருக்கு போயிருந்த சமயம் ஜப்பானிலிருந்து பிரபாவின் நண்பர் கொண்டு வந்திருந்த மகாதியான நீர் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு பிலாசபி பிரபாகரனும் அஞ்சா சிங்கமும் முகாமிட்டார்கள். 

வித்தியாசமான சைட் டிஷ் செய்கிறேன் என்று செல்வின் சிக்கனும் வெங்காயமும் வாங்கி வரச் சொன்னார். நானும் வாங்கி வந்தேன். அதுநாள் வரை நாங்கள் பார்த்து பழகிய மசாலாப் பொருட்களை புறந்தள்ளி விட்டு வெறும் வெங்காயம், காய்ந்த மிளகாயை மட்டும் வைத்து ஒரு சிக்கன் அயிட்டம் செய்து வந்தார். 

எந்த நிறமும் இல்லை. பார்வைக்கு வசீகரமும் இல்லை. தயக்கத்துடன் தான் முதல் துண்டை எடுத்து வாயில் வைத்தேன். உச்சி மயிர் நட்டுக்கிட்டது. சுவையில் இது ராஜ சுவை என்பது மட்டும் புரிந்து போனது. செய்து வந்த சிக்கனில் பெரும் பகுதி நான் மட்டும் தான் சாப்பிட்டேன். 

பிறகு எப்ப வீட்டில் சமைக்க சிக்கன் வாங்கினாலும் கூடுதலாக கால்கிலோவாவது வாங்குவேன் இந்த பள்ளிப்பாளையம் சிக்கனுக்காக. சுவையில் இதை அடிச்சிக்கவே முடியாது. 

அந்த ரெசிபியை உங்களுக்காக பகிர்ந்து இருக்கிறேன், அனுபவியுங்கள் ராஜசுவையை.



ஆரூர் மூனா

No comments:

Post a Comment