Thursday 16 July 2015

மாரி - சினிமா விமர்சனம்

இன்று வில்லிவாக்கம் ஏஜிஎஸ் திரை வளாகத்தில் உள்ள 5 தியேட்டர்களிலும் 9 மணிக்காட்சி மாரி தான். அத்தனை அரங்குகளும் ஹவுஸ்புல். படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எந்தளவுக்கு இருந்தது என்பதற்கு சாம்பிள். காரணம், தனுஷின் முந்தைய படங்களான விஐபி மற்றும் அனேகன் படங்களின் வெற்றி.


திருவெல்லிக்கேணி பகுதியில் மாமூல் வசூல் செய்து கொண்டும், ஏரியா மக்களை மிரட்டி ரவுடியிசம் செய்து கொண்டும், புறா பந்தயத்தில் ரொம்ப வருடங்களாக ஜெயித்துக் கொண்டும் இருப்பவர் தனுஷ். 

செம்மரக் கடத்தலில் பெரிய ஆளாக இருக்கும் சண்முக ராஜேஸ்வரனிட்ம் கப்பம் கட்டி வாழ்ந்து வருகிறார். அவரிடம் இன்னொரு கையாளாக இருக்கும் மைம் கோபி தனுஷின் இடத்தை பிடிக்க முயற்சிக்கிறார். அந்த ஏரியா ஸ்டேஷனுக்கு எஸ்ஐயாக வரும் விஜய் யேசுதாஸ் உதவியுடன் சதி செய்து தனுஷை உள்ளே தள்ளி ஏரியா தாதா ஆகின்றார். 


வெளியே வரும் தனுஷ் சதி வேலைகளை முறியடித்து தன் இடத்தை திரும்ப அடைந்தாரா என்பதே மாரி படத்தின் தோராயமான கதை. 

தனுஷ் ஒரு மாஸான படம் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறார். அதற்கேற்றாற் போல அமைந்திருக்கிறது படம். படம் முழுக்கவே ஸ்டைலாக நடந்து வந்தும், பஞ்ச் டயலாக் பேசியும் ரசிகர்களை மகிழ்விக்கிறார். அனுபவித்து நடித்து இருக்கிறார். 

ரொம்ப வருடங்களாக சினிமாவில் பெரிய ஆளாக முயற்சித்து வந்த ரோபோ சங்கர் இந்த படத்தின் மூலம் சோலோ காமெடியன் ஆகி வெற்றி பெற்று இருக்கிறார். அவர் தான் இந்த படத்தின் ஆகச் சிறந்த ப்ளஸ். தனுஷ்க்கு நிகராக படத்தில் கைத்தட்டல் பெறுகிறார். இவரது என்கவுண்ட்டர் டயலாக்குகள் தான் படத்தை ரசிக்கவே வைக்கின்றன. மனிதர் இது போல் பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வாழ்த்துக்கள்.


நாயகியாக காஜல் அகர்வால், நாயகனின் கூட இருந்து கழுத்தறுக்கும் வித்தியாசமான கதாபாத்திரம். இவருக்கு மைனஸ் இருக்கிறது. சில ஆங்கிள்களில் பார்த்தால் டொங்கு போல இருப்பார். இந்த படத்தில் அந்த ஆங்கிள்களில் பல காட்சிகளில் வருகிறார். பார்க்க நமக்கு தான் கஷ்டமாக இருக்கிறது. 

வில்லனாக அறிமுகம் விஜய் யேசுதாஸ். ஆரம்ப காட்சிகளில் பில்ட்அப்களை கொடுக்கும் போது ஏதோ செய்யப் போகிறார் என்று எதிர்ப்பார்த்தால் திடீரென வில்லனாக ட்விஸ்ட் கொடுக்கிறார். 

இதற்கு முன்பு பாடல்களை கேட்கவில்லை என்பதால் படத்தில் பார்க்கும் போது பெரிதாக ஈர்க்கவில்லை. 


படத்தில் எனக்கு பிடித்த ஒரே ஒரு காட்சி, தனுஷிடம் இருந்து ஏரியா கையை விட்டுப் போன பிறகு முயற்சி எடுத்து சண்முகராஜேஸ்வரனையும் தன் ஏரியா ஆட்களையும் ஜெயிலில் இருந்து வெளியே எடுத்த பிறகு தன் ஏரியாவில் டேபிள் சேர் போட்டு அமர்ந்து பிஜிலி வெடிகளை எடுத்து பற்ற வைத்து வில்லன் ஆட்கள் மீது போட்டு வெடிக்க வைத்து கலாய்க்கும் போதும், மாமூல் வாங்க வந்த வில்லன் ஆட்களை தவிர்த்து ஏரியா மக்கள் தனுஷிடமே வந்து மீண்டும் மாமூல் கொடுக்கும் காட்சி மட்டும் தான். 

மற்றபடி படம் சுமார் தான். படத்தில் காளி கொடுக்கும் பில்ட்அப்புகளுக்கு ஏற்ப தாதா ப்ளாஷ்பேக்கோ, தனுஷிடம் முரட்டுத்தனமோ இல்லை. அது தான் படத்தை பெரிதும் ஆட்டம் காண செய்கிறது. ரெண்டு காமெடி அல்லக்கைகளை வைத்துக் கொண்டு தனுஷ் எப்படி ஒரு ஏரியாவை கண்ட்ரோல் செய்கிறார் என்பதை நம்ப முடியும்.

அவரது காமெடி ரவுடியிசமும், ஹீரோயிசமும் எடுபடவேயில்லை. செஞ்சிடுவேன், செஞ்சிடுவேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாரே தவிர ஒன்னுமே செய்யவில்லை என்பது தான் வருத்தமே.

புறா பந்தயம் பற்றிய டீடெயிலிங் பிரமிக்க வைக்கிறது. அதையே களமாக எடுத்து ரவுடியிசத்தை குறைத்து இருந்தால் கூட படம் நல்லா வந்து இருக்குமோ என்னவோ.

இந்த வார இறுதி முழுக்க எல்லா அரங்குகளும் ஹவுஸ்புல் ஆகி விட்டது. அதனால் வசூலுக்கு குறைவிருக்காது. ஆனால் திருப்திப்படுத்துமா என்று கேட்டால் ப்ச் தான் பதிலாக இருக்கும்.

ஆரூர் மூனா

2 comments:

  1. ம் ஏதோ பார்க்கலாம் என்றுள்ளது விமர்சனம்... ரைட்டு...

    நன்றி...

    ReplyDelete
  2. Itharkku peyarthaan vaitherichal enpathu

    ReplyDelete