Thursday 17 September 2015

மாயா - சினிமா விமர்சனம்

இன்னைக்கு எந்த படம் போவது என்ற குழப்பத்திலேயே இருந்தேன். முன்னர் முடிவு பண்ணி வச்சிருந்தது ரஜினி முருகனுக்கு தான். ஆனால் படம் கடைசி நிமிடத்தில் வாபசானதால் த்ரிஷா இல்லைனா நயன்தாரா தான் சாய்ஸாக இருந்தது இல்லைனா 49ஓ. ஆனால் மாயா ஆப்சன்லயே இல்லை. ஆனால் பாருங்கள். பார்க்க நேர்ந்தது மாயா தான். 


ஏன் மாயா சாய்ஸில் வைக்கவில்லை என ரொம்பவே வருத்தப்படுகிறேன். செம படம். மெரட்டு மெரட்டுன்னு மெரட்டி விட்டார்கள். 

படம் நான் லீனியரில் சொல்லப்படுகிறது. நயன்தாரா கணவனை விட்டு பிரிந்து கைக்குழந்தையுடன் சிரமப்பட்டு சினிமாவில் நடிகையாக முயற்சிக்கிறார். மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறார். 

பெருமாள் ஒரு திகில் படத்தை இயக்கி விட்டு அதனை விற்க முடியாமல் ஒரு பரிசுப் போட்டியை வைக்கிறார். அந்த படத்தை தனியாக யாராவது பார்த்து விட்டால் அவர்களுக்கு ரூ 5 லட்சம் பரிசு என. 


பத்திரிக்கை அலுவலகத்தில் ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கிறார் ஆரி. மாயா என்னும் பேய் பற்றிய விவரங்கள் ஒரு பத்திரிக்கையாளர் மூலம் தெரிய வருகிறது. அந்த ஊரின் புறநகரில் உள்ள மாயவனம் என்ற காட்டில் 24 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்து போன மாயா என்னும் மனநோயாளி இருப்பதும் அந்த மாயா புதைக்கப்பட்ட இடத்தில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் புதைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது. 

அந்த காட்டிற்கு சென்ற ஆரியின் நண்பன் மறுநாள் இரவு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். 


பணக்கஷ்டத்தின் காரணமாக அந்த பேய்ப்படத்தை தனியாக பார்க்க வருகிறார் நயன்தாரா. நயன்தாராவுக்கு முன் அந்த படத்தை பார்க்க வந்த ஒரு வினியோகஸ்தர் அரங்கிலேயே பேயினால் கொல்லப்படுகிறார். 

நயன்தாராவுக்கு என்ன ஆனது. ஆரிக்கும் நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு. அந்த வைர மோதிரம் என்ன ஆனது. பேய்க்கும் நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு இன்னும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறது மாயா திரைப்படம்.

திகில் படம்னா கொடூர மேக்கப் போட்டு ரத்தம் ஒழுக மிரட்டுவது, நாலு பேரை ரண கொடூரமாக கொல்வது என்றெல்லாம் இல்லாமல் இருட்டை வைத்தே மிரட்டி இருக்கிறார்கள். 

இது பேய்ப்படம் இல்லை, அம்மா சென்ட்டிமெண்ட் படம். பேய் வெர்ஷன். 

ஆரிக்கு அடுத்த வெற்றிப் படம். இயல்பாக நடித்துள்ளார். மாடியில் இருந்து ஒரு மனநோயாளி குதிக்க இருக்கும் சமயம் பதைபதைத்து மாடியில் ஏறி ஒரு நிமிடம் தான் தடுமாறி மாடியி விழ இருக்கும் சமயம் தேர்ந்த நடிகன் என்பதை நிரூபித்து இருக்கிறார். 

படத்தின் முதல் பாதியில் குறைந்த காட்சியில் நயன்தாரா வருவதால் இவருக்கான ஸ்கோப் குறைவோ என்று நினைத்தேன். இரண்டாம் பாதியில் நடிப்பில் பின்னி இருக்கிறார் நடிப்பு ராட்சசி. அந்த குழந்தையுடன் கலங்கி படுக்கையில் இருக்கும் போது நம்மையும் கலங்க வைக்கிறார். 

ஆரியுடன் என்ன உறவு என தெரிய வரும் போது அட போட வைக்கிறார். 

ரோபோ சங்கருக்கு ஒரு சின்ன கதாபாத்திரம், திடீரென நயன்தாராவை சுட்டு விட்டு தப்பியோடும் போது ஸ்ட்ரெக்சரில் உள்ள பாடியை சுட்டு விட்டு துணியை விலக்கி பார்த்து அது தன் உருவம் தான் என தெரிந்ததும் அதிர்ந்து போகும் போது கைதட்டலை பெறுகிறார். 

கண்டிப்பாக ஒளிப்பதிவு கூடுதல் கவனத்தை பெறுகிறது. நயன்தாராவுக்கு ஒரு டோன், ஆரி வரும் காட்சிகளுக்கு ஒரு டோன் கொடுத்து இரண்டையும் மேட்ச் பண்ணும் போது பலே சொல்ல வைக்கிறார். 

க்ளைமாக்ஸில் நயன்தாரா ஒரு சக்கர நாற்காலியில் திரும்பி அமர்ந்திருக்கும் போது ஷுட்டிங் நடக்கும். பின்னால் இருந்து கேமரா ஜும் ஆகி வந்து கடைசியாக நிற்கும் உதவி இயக்குனரின் தோளில் ஒரு கை விழும், திரும்பிப் பார்த்தால் அது நயன்தாரா. அந்த நிமிடம்  எனக்குள் பயஉணர்ச்சி பீறிட்டு கிளம்பி தலையில் ஜிவ் என சுரந்தது. 

அது தான் இந்த படத்தின் வெற்றி. சொல்வதற்கும் பகிர்ந்து கொள்ளவும் நிறையவே இருக்கிறது. ஆனால் ஓப்பனாக சொல்லி விட்டால் அது பார்க்கும் போது படத்தின்  சுவாரஸ்யத்தை குறைக்கும். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். கண்டிப்பாக அரங்கில் போய் படத்தை பார்த்து பயந்து வாருங்கள்.

இந்த ஆண்டின் இன்னுமொரு சிறந்த பேய்ப்படம். பார்த்து பயப்படுங்கள். 

ஆரூர் மூனா

8 comments:

  1. Yes sema movie I too didn't had option to see this. Fantastic ghost version of mother sentiment

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நான் கூட நன்றாக என்சாய் செய்து பார்த்தேன்

      Delete
  2. Hi ji
    Tamilveli link moodinathukku apuram
    Unga blog romba naala thedinen
    Innaikku neenga maya padam pona maathiri
    Yethechya link kidachathu
    Ashiq... happy annachi.
    Ungal radigan

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆஷிக். உங்களைப் போன்றவர்கள் தான் என் எனர்ஜி

      Delete