Wednesday 26 November 2014

சென்னை பயங்கரம் உஷார்

பழைய சாதம் பொக்கிஷம் என்ற லேபிளில் இருக்கும் பதிவுகள் எல்லாது பழைய பதிவுகள் அவை அந்த பதிவிலிருந்து எடுத்து வைப்பதற்காக மட்டுமே இங்கு பதியப்படுகிறது.

இது ஜனவரி 2011 மாதத்தின் பதிவு

நேற்று என் பழைய அலுவலகத்தின் நண்பன் அங்கு அலுவலக உதவியாளராக பணிபுரியும் வட இந்தியாவை சேர்ந்த ரஞ்சன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 22. ஒரு வேலையாக சென்ட்ரல் வந்து வேலையை முடித்து மீண்டும் அலுவலகம் வர பார்க் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போதுஒரு பெண்மணி அவனை சைகை காட்டி அழைத்துள்ளார். அப்பொழுது மணி மாலை ஏழு. பையனும் சபலப்பட்டு அவரை நோக்கி சென்றுள்ளார். அந்த பெண்மணி அவரை ரயில்வே டிராக் பக்கம் அழைத்து சென்றுள்ளார். பையன் உணர்ச்சியில் இருக்க அந்த பெண்மணி நன்றாக இருட்டு பக்கம் அழைத்து அவனை மேலும் சிறிது உணர்ச்சிவசப்படுத்தி இருக்கிறார். அப்பொழுது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அவனை பிடித்து அடித்து பின் பக்கம் கையை கட்டி இருக்கிறார்கள். அந்த பெண்மணியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அடித்துள்ளார். பிறகு அவனிடமிருந்த பர்ஸ், பணம், செல் மற்றும் அவனது செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு . . . . . . . . . முதலில் அவ்வளவு தான் சொன்னான். ஆனால் அவன் அழுது கொண்டு பாத்ரூமில் இருக்க அவனை கொஞ்சம் தாக சாந்தி யில் கொஞ்சம் மூழ்க விட்டு பிறகு கிளறி கேட்டால் சொன்னான் பாருங்கள் - அய்யய்யோ இது சென்னை தானா.
இத்துடன் அவர்கள் விட்டிருந்தால் எந்த ப்ளாக் கிற்கே அவசியமில்லை. இது சாதாரண விஷயம் நகரத்தில் சபலத்தின் விலை என்று விட்டிருக்கலாம். ஆனால் அந்த வாலிபர்கள் அவனை . . . .
ஏங்க இது என்ன சரோஜா தேவி கதை புத்தகமா. . . இருங்க. . . டீன் எஜர்களே நீங்கள் கொஞ்சம் உஷாராக இருங்கள்.
உண்மை என்னவெனில் அவன் வடஇந்திய பையன் அல்லவா. நல்லா சிகப்பு. அவனை பிடித்து வாயை கட்டி பேண்டை கழட்டி இருவரும் அவன் ஆசன வாயில் . . . . வேண்டாம் இதற்கு மேல் சொல்ல வேண்டாம். நீங்களே யூகித்து கொள்ளுங்கள். எல்லாம் முடிந்த பிறகு அவனை அங்கேயே அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளார்கள். அதற்க்கு பிறகு அவன் கையில் காசில்லாமல் வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து ஆபீஸ் வந்து பணம் வாங்கி கொடுத்து ரூமிற்கு வந்து எனக்கு போன் செய்தான். பிறகு தான் எல்லாம் நடந்தது.
அவனை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் சென்று ஒரு செக் அப் செய்த பின் டாக்டர் தான் சொன்னார். அவன் பின்புறம் இருந்து ரத்தம் வருகிறது என்று. பிறகு எல்லாம் முடிந்த பிறகு அவனை அவன் ரூமில் விட்டு விட்டு வந்தேன்.
இது நடந்தது சென்னையில் எங்களால் யாரிடமும் புகார் செய்ய முடிய வில்லை. அவன் வேண்டாம் எனக்கு அசிங்கம் என்று கூறி விட்டான். நான் என் மனதுக்கு கேட்காமல் ப்ளாகில் எழுதுகிறேன். மக்களே உஷார் இது யாருக்கும் நடக்கலாம். அதனால் நீங்கள் உஷாராக இருங்கள். மீண்டும் அதே ரயில் நிலையத்தில் யாரையும் அதே போல் ஒரு பெண் அழைக்கலாம்.
யப்பா இது சென்னை வந்தாரை வாழ வைக்கும் சென்னை. சிறிது சபலப்பட்டால் விளைவு இது தான்.
 
ஆரூர் மூனா

No comments:

Post a Comment