Friday 28 November 2014

காவியத்தலைவன் - சினிமா விமர்சனம்

நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று சினிமா விமர்சனம் எழுதுகிறேன்.

1930களில் நாசரின் நாடக குழுவில் சித்தார்த்தும் பிரித்விராஜ்-ம் சைடுபார்ட்டாக நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் இலக்கு ராஜபார்ட்டாக இருக்கிறது. ஆனால் அவர்களின் வழிமுறையில் வித்தியாசம் என்னவென்றால் பிரித்விராஜ் ரஜினியாக நினைக்கிறார். சித்தார்த் கமல்ஆக நினைக்கிறார்.



 ஒரு சமயத்தில் சித்தார்த் ராஜபார்ட்டாக நடிக்கத் துவங்கும் போது பிரித்விராஜ் பொறாமை கொள்கிறார். சித்தார்த்தின் ஜமீன்தாரின் மகளுடனான காதலை நாசரிடம் போட்டுக் கொடுக்கிறார். அதனால் கம்பெனியை விட்டு துரத்தப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

நாடககுழுவில் ஸ்திரீபார்ட்டாக நடிக்க வேதிகா வருகிறார். பிரித்விராஜ் வேதிகாவை விரும்ப வேதிகாவோ சித்தார்த்தை விரும்புகிறார். இதனால் சித்தார்த் மீது மேலும் வன்மம் கொள்கிறார் பிரித்விராஜ்.

நாசரின் மறைவுக்கு பிறகு நாடககுழு பிரித்விராஜ் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. சித்தார்த்தை நாடககுழுவை விட்டே துரத்துகிறார். பிறகு நாடககுழுவுடன் சித்தார்த் சேர்ந்தாரா வேதிகாவின் காதல் என்னவானது என்பதே காவியத்தலைவன்.
எதிலும் நல்லதே காணும் மனோபாவம் கொண்ட கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக சித்தார்த். சிறப்பாக நடித்துள்ளார். ராஜபார்ட் தேர்வுக்காக சூரபத்மனாக நடிக்கும் போது பிரமாதப்படுத்தி விடுகிறார். கண்டிப்பாக இந்தப்படம் அவரின் மார்க்கெட்டை இரண்டு படி உயர்த்திவிடுகிறது.

பிரித்விராஜ் கூட சித்தார்த்துக்கு கொஞ்சம் கூட சளைத்தவரில்லை. க்ளைமாக்ஸில் சித்தார்த்தின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து தான் தோல்வியினால் பட்ட அவமானத்தை கண்ணீர் மல்க சொல்லும் போது தியேட்டரில் எழுந்து நின்று கைத்தட்ட தோன்றியது. நீர் நடிகனய்யா.
வேதிகா புராண பாத்திரங்களில் பின்னி எடுக்கிறார். சித்தார்த்துக்காக காத்திருந்து அடையும் காட்சியிலும் பிரித்விராஜை புறம் தள்ளும் காட்சியிலும் அட போட வைக்கிறார்.

நாசர் பற்றி சிறப்பாக சொல்லாவிட்டால் தான் தப்பு. கண்டிப்பாக குறிப்பிட வேண்டியது பொன்வண்ணனின் நடிப்பை தான். ராஜபார்ட்டுக்கு கனகச்சிதமாக பொருந்துகிறார்.

காஸ்ட்யூம்கள் கனகச்சிதமாக இருக்கிறது. இயக்குனரின் மெனக்கெடல் தெரிகிறது.

எனக்கு பெரிய ஆச்சரியம் இசை தான். எந்த இடத்திலும் கம்ப்யூட்டர் கம்போசர் ஏஆர் ரஹ்மான் என்ற அடையாளம் தெரியவேயில்லை. அந்த கால இசை, இசைக்கருவிகள் என பின்னி பெடலெடுத்து இருக்கிறார். 

நெருடலான ஒரு விஷயம் லொகேஷன்கள். சுமாரான மசாலா இந்தி படமான ஆக்சன் ரீப்ளே படத்துக்கே 80களின் மும்பைக்கு மெனக்கெட்டு இருந்தார்கள். மதராஸபட்டிணம் படத்துக்கும் அப்படிதான் செய்திருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் படக்குழுவினர் மெனக்கெடவேயில்லை. காரைக்குடி பக்கம் செட்டியார் வீடுகளே போதும் என நினைத்து விட்டார்கள். 

ஐமீன் தங்குமிடம் மட்டும் தான் லொகேஷனுக்கு பொருந்துகிறது. கரண்ட் இல்லாத கிராமங்களில் லாந்தர் விளக்குகளை வைத்து மேடைக்கு வெளிச்சம் தரும் இடமும் சூப்பர். மற்ற இடங்கள் எல்லாம் சுமார் தான். அதே போல் சுதந்திர போராட்டம் கூட. பொருந்தவில்லை.

மற்றபடி படத்தில் தமிழகத்தின் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் உள்ள நாடககலையினை மேக்கப், நடிப்பு மூலம் மிரட்டியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் பகீர். 

பார்த்து ரசியுங்கள்.

ஆரூர் மூனா

6 comments:

  1. அதே முந்தைய அனுபவ முதிர்ச்சி உங்கள் எழுத்தில்....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விமர்சனம் சூப்பர் . வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ...sunday போகலாம் னு இருக்கேன் ...

    ReplyDelete
  4. விமர்சனம் சூப்பர் சார்!

    ReplyDelete