Sunday 1 February 2015

கிடைத்தது மத்திய அரசு வேலை - பழசு

ஒரு வழியாக அதோ இதோ என்று என்னை ஏமாற்றிக் கொண்டிருந்த ரயில்வே வேலை கிடைத்தே விட்டது. நான் 2000-ம் ஆண்டு ரயில்வேயில் அப்ரென்டிஸ் முடித்தவன். அன்றிலிருந்து நேற்று வரை சீனியாரிட்டி படி வேலை வரவில்லை. அதற்குள் நான் வேறு துறைக்கு வேலைக்கு சென்று விட்டேன். பிறகு சொந்தமாக பிஸினஸ் செய்து வந்தேன். இதற்கிடையில் நான் கடந்த ஜனவரியில் ரயில்வேயில் செக்ஷன் இஞ்சினியர் வேலைக்கு நுழைவுத்தேர்வு எழுதினேன். தேர்வு முடிவுகள் வர தாமதமானதால் நான் அதைப்பற்றி மறந்தும் விட்டேன். நேற்று ஒரு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தால் செக்ஷன் இஞ்சினியர் வேலைக்கு நான் தேர்வாகி விட்டதாக அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்.
சந்தோஷம்.

இன்றிலிருந்து நான் மத்திய அரசு ஊழியர். அதுவும் ரயில்வே ஊழியர். நேற்று இரவிலிருந்து பார்ட்டிகள் தொடங்கி விட்டது. நேற்று வரை தொடர்பில் இல்லாத நண்பர்கள் கூட இன்று தொடர்பு கொண்டு வாழ்த்துகின்றனர். பார்ட்டிக்கு நாள் குறிக்கின்றனர். இப்பொழுது கூட நான் பார்ட்டியில் பிஸி.
சரி நண்பர்களே. பார்ட்டி முடிந்ததும் சந்திப்போம்.


நன்றி


ஆரூர்முனா

No comments:

Post a Comment