Sunday 1 February 2015

அனைத்துத் துறை HRDகளும் மனிதாபிமானமில்லாதவர்களா - பழசு

நான் ஏற்கனவே ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தவன். அங்கும் மற்ற துறையினரை விட இந்த HRDக்கள் மட்டும் லையில் கொம்பு முளைத்தது போல் நடந்து கொள்வர். பிரமோஷன், இன்க்கிரிமெண்ட், டிரான்ஸ்பர் பற்றி நாம் எந்த கோரிக்கை கொடுத்தாலோ அல்லது சந்தேகம் கேட்டாலோ ஏதோ அவர்கள் வேலையில் நாம் தலையிட்டு இடைஞ்சல் செய்தது போல நடந்து கொள்வர். இங்கு மட்டுமல்ல, எந்த ஐடி கம்பெனியிலும் அவர்கள் அப்படித்தான். சரி இவர்கள் தனியார் துறையில் அதிக சம்பளத்தில் இருப்பதனால் தான் இப்படி நடந்து கொள்கிறன்றனர் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் நேற்று முன்தினம் வரை.

எனக்கு நேற்று முன்தினம் ரயில்வே வேலைக்கான சர்டிபிகேட் வெரிபிகேசன் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.ஆர்.பி அலுவலகத்தில் நடந்தது. 12.45 மணிக்கு உள் செல்ல வேண்டும். என்னுடன் அதே நேரம் உள் செல்ல வேண்டியவர்கள் மொத்தம் 70 பேர். அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வடமாநிலத்தவர்கள். அவர்கள் அனுபவ அறிவும் குறைவு தான். புது இடம் என்பதால் அவர்கள் விசாரித்து வரவே சில நிமிடங்கள் நேரமாகிவிட்டது. அப்படி வந்தவர்களை ரயில்வே HRDக்கள் உள்ளேயே அனுமதிக்க மறுத்து விட்டனர். அவர்கள் கெஞ்சிய பிறகு ஒருவாறாக திட்டிக் கொண்டே உள்ளே அனுமதித்தனர்.

கவுன்சிலிங் துவங்கியது. நான் ஒரு விஷயத்தில் சொதப்பி விட்டேன். அதாவது அவர்கள் மொத்தம் 3 போட்டோக்கள் கேட்டிருந்தனர். ஆனால் நான் 2 போட்டோ மட்டுமே கொண்டு சென்றிருந்தேன். அவர்களில் ஒருவரிடம் விஷயம சொல்லி பத்து நிமிடம் டைம் கொடுங்கள். நான் சென்று ஸ்டுடியோவில் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன் என்றேன். உடனே அவர் போட்டோ இல்லையா, வெளியே போ உனக்கு வேலையில்லை என்றார். என்னடா இது வம்பாகிவிடடது. அவ்வளவு சிரமப்பட்டு எழுதி வாங்கிய வேலை ஒரு போட்டோ குறைந்ததால் இல்லையென்கிறார்களே என்று கடுப்பாகி விட்டது. வேறு வழி இன்றி பேசாமல் அமர்ந்தேன்.

கவுன்சிலிங்கில் இவர்கள் வடஇந்தியர்களை படுத்தியபாடு இருக்கிறதே, இவர்களுக்கோ இந்தி சரிவர பேச வரவில்லை. வடஇந்தியர்களுக்கோ இந்தியை தவிர வேறு மொழி தெரியவில்லை. அவர்களை பாடாய்ப்படுத்தி விட்டனர். போட்டோ சரியில்லை, கையெழுத்து சரியில்லை, கைரேகை சரியில்லை என்று அவர்களை பயமுறுத்தி வந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து என் முறை வந்ததும் என் பெயர் சொல்லி அழைத்தனர். நான் அவர்கள் டேபிள் முன் உட்கார்ந்தேன். போட்டோ இல்லை என்று நான் கூறிய நபர் மற்றவர்களிடம் இவன் போட்டோ எடுத்து வரவில்லை என்ன செய்யலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களில் மலையாளி ஒருவர் என்னுடைய புரொபைலை எடுத்து அதில் ஏற்கனவே நான் அப்ளை செய்யும் போது அனுப்பி இருந்த எக்ஸ்ட்ரா போட்டோவை கொடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளும்படி கூறினார்.

ஒரு வழியாக கவுன்சிலிங் முடித்து வெளிவந்தேன். இன்னும் ஒரு மாதத்தில் மெடிக்கல் டெஸ்ட்டுக்கான லெட்டர் வீட்டுக்கு வரும் என்று கூறி அனுப்பினர்.

நான் உள்சென்று அமர்ந்ததிலிருந்து என்னை அழைக்கும் வரை எனக்கு 2மணிநேரம் இருந்தது. என்னை வெளியில் அனுப்பியிருந்தால் நான் பக்கத்தில் இருந்த ஸ்டுடியோவில் போட்டோவை பிரிண்ட் எடுத்து அதிகபட்சம் 15 நிமிடத்தில் உள்ளே வந்திருப்பேன். அதை விட்டு என்னை 2மணிநேரமும் டென்ஷனில் நகம் கடிக்க வைத்தவர்களை என்னவென்று சொல்வது

ஏன்
இந்த HRDக்கள் மட்டும் இப்படி நடந்து கொள்கின்றனர். இந்த துறைக்கு வந்தால் சட்டென்று கொம்பு முளைத்து விடுமா என்ன


ஆரூர் முனா

No comments:

Post a Comment