Sunday 1 February 2015

பதிவிடுபவன் எல்லாம் முட்டாளா? - பழசு

எவன்டா இந்த பதிவ கண்டுபிடிச்சது. என் கண்ணுல மாட்டுனான்னா அவனை நானே கழுத்தறுத்து கொன்னுபோட்டுடுவேன். கொல செய்ய தூண்டுறவனுங்களா, என்ன கொடுமைங்கண்ணா இது. இதுல விஷேசம் என்னவென்றால் ஏதோ ஓரு நாள் இணையத்தில் தேடிய போது ஒரு நாள் சவுக்கு அண்ணனின் பதிவு கிடைத்தது, அவருடன் தொடர்ந்த போது கேபிள் அண்ணன், உண்மைத்தமிழன் அண்ணன், ஜாக்கி அண்ணன் ஆகியோரின் பதிவு எனக்கு கிடைத்தது. அவர்களின் பதிவை படித்த போது தமிழில் எழுதுபவர்கள் பற்றி புளங்காகிதம் அடைந்தேன். சில நாட்களுக்கு பிறகு நாமும் எழுதினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. இது படிப்படியாக வளர்ந்து நாமும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எல்லாம் ஒன்னு தான். சரி விடு.

ஐயா சாமி, எழுத்தாளர்கள் போல் என்னால் எழுத முடியாது. பதிவில் எழுதும் திறமையாளர்கள் போல் என்னால் எழுத முடியாது. ஏனென்றால் நான் படிப்பவன் மட்டுமே. இத்தனைக்கும் நான் ஒரு சவால் விடுகிறேன். யாராவது என்னைப்போல் தமிழ்ப்புத்தகங்களை படிப்பவர்கள் யாராவது இருந்தால் நான் அவர்கள் காலில் மண்டியிடுகிறேன். என்னிடம் உள்ள புத்தகங்கள் குறைந்தது 10000. ஆனால் இது எல்லாம் ஒரு நாளில் நடந்ததல்ல. நான் பத்து வருடங்களில் புத்தக கண்காட்சியில் சேர்த்தது.

ஆனாலும் ஒரு விஷயம் என்னவென்றால் மிகப்பெரிய பணக்காரனாக இருந்து ஒரே நாளில் பங்கு சந்தையில் ஒரு கோடிக்கு மேல் தங்கத்தில் விட்டவன் நான் . அதிலிருந்து மீளவே எனக்கு இரண்டு வருடம் பிடித்தது. அந்த இடைவெளியில் நான் இழந்தது பல லட்சம் ரூபாய்கள். எல்லாம் இழந்து ஊருக்கு போகும் போது கூட என்னுடன் வந்தது என் மனைவியுடன் சேர்த்து என் புத்தகங்கள் மட்டுமே,.

என்னால் மற்ற பதிவர்களின் பதிவை பாராட்டி அதன் மூலம் என் பதிவின் ஹிட் பெறவேண்டும் என்று நினைப்பவன் நான் அல்ல.

என்றாவது ஒரு நாள் இத்தனை புத்தகங்கள் படித்ததன் மூலம் நானும் ஓரு சவால் விடுகிறேன். என்னைப்போல் படித்துப்பாருங்கள். நீங்களும் ஒரு நாள் எழுத்தாளர் ஆவீர்கள் நன்றி.

ஆரூர் முனா

No comments:

Post a Comment