Sunday 1 February 2015

வேட்பாளரிடம் சிக்கி நான் பட்ட பாடு - பழசு

எனது வீடு ஆவடி நகராட்சி 9வது வார்டில் வருகிறது. ஆனால் எனக்கு ஒட்டு திருவாரூர் நகராட்சி 13வது வார்டில் இருக்கிறது. ஓட்டு போட நான் திருவாரூர் செல்ல வேண்டும். ஆனால் அதே தேதியில் எனக்கு ஆர்.ஆர்.பி சென்னை அலுவலகத்தில் சர்டிபிகேட் வெரிபிகேஷன் உள்ளது. எனவே இந்த தேர்தலில் என்னால் ஓட்டு போட முடியாது. ஆனால் பாருங்கள் எனக்கு வந்த சோதனை. ஆவடி நகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தினமும் ஓட்டு கேட்டு எனது வீட்டிற்கு வருகிறார்கள். வாசலில் இருந்து அழைக்கிறார்கள் என்பதற்காக சட்டையை போட்டு வந்து அவர்களிடம் பேசினால் அவர்கள் அண்ணே எங்கள் வேட்பாளருக்கே ஒட்டு போட வேண்டும் என்றும், எங்கள் சாலை மோசமாக இருப்பதால் கண்டிப்பாக நாங்கள் சரி செய்து தருகிறோம் என்றும் கூறி செல்கிறார்கள், ஒரு முறை அல்லது சில முறை என்றால் பரவாயில்லை. ஒரு மணிநேரத்திற்கு ஒரு குழு வந்து ஒட்டு கேட்கிறது. நான் அவர்களிடம் எனக்கு ஒட்டு இந்த தொகுதியில் இல்லை என்று சொன்னாலும் ஒட்டு கேட்பது ஓய்ந்தபாடில்லை. அதே குழு ஒரு மணிநேரம் கழித்து வந்து என்னிடம் வந்து மீண்டும் ஓட்டு கேட்கிறது. இதில் ஒருவர் இருக்கிறார், ஒவ்வொரு குழு வரும்போதும் அத்தனை குழுவிலும் அவர் இருக்கிறார். அவருடைய வேலை வாழ்க சொல்வது தான். இந்த தேர்தல் முடியும் வரை அவருக்கு நல்ல வருமானம் தான். என் மனைவியோ வேலைக்கு சென்று விடுவதால் அவள் இந்த தொல்லையிலிருந்து தப்பித்து விடுகிறாள். நான் வீட்டில் தனியாக இருப்பதால் மாட்டிக் கொள்கிறேன். தேர்தல் முடியும் வரை என் பாடு திண்டாட்டம் தான்.

ஆரூர் முனா

No comments:

Post a Comment