Wednesday 25 February 2015

பெரிய வேலைக்காரன்

இரண்டு மாதங்களுக்கு முன் எனது வெஸ்டிபுள் குரூப்புக்கு நான்கு கலாசிகள் இணைந்தனர். இருவர் மலையாளிகள், இருவர் ராஜஸ்தானிகள். நான் வெஸ்டிபுள் டோர் கேங் ஆள். இன்று ஒரு வேலையாக என் குரூப்பில் இருந்த என்னைத் தவிர மீதி நால்வரும் ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ்ஸில் ஏற்பட்ட பழுதை நீக்க வேண்டி எக்மோர் யார்டுக்கு சென்று விட்டனர். 


என்னுடன் அந்த நாலு கலாசிகளும் சேர்ந்து இன்று வெஸ்டிபுள் டோர் பழுது நீக்கும் பணிக்கு சென்றிருந்தோம். ஒரு வேலையை சற்று சீக்கிரமாகவே முடிக்க மற்றவர்கள் என்னை "சூப்பர் சார். அருமை, எப்படி இவ்வளவு சீக்கிரம் வேலையை முடிக்கிறீர்கள் நீங்கள் வராத அன்று உங்கள் குழுவில் வேலை பார்த்து இருக்கிறோம், மற்றவர்கள் வழவழவென்று வேலையை இழுப்பார்கள், நீங்கள் அரைமணியில் ஒரு கோச்சை முடித்து விட்டீர்கள்" என்று பாராட்டினார்கள், எனக்கு தலையில் கிரீடம் ஏறியது.

ஒரு கோச்சில் வேலையை முடித்து விட்டு அடுத்த கோச்சுக்கு சென்றோம். ரோலிங் ஷட்டரில் பெரிய பழுது இல்லை. ஆனால் ஷட்டரை ஏற்றி இறக்கும் போது ஒரு இடத்தில் எங்கோ உரசி சத்தம் வருகிறது. எங்கே உரசுகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. மற்ற நால்வரும் என்னை பார்க்கிறார்கள். பழைய கேங்காக இருந்தால் எல்லோருக்கும் வேலை தெரியும். இன்றைய கேங்கில் நான் மட்டும் தான் அனுபவசாலி.

அடடா, இப்பத்தானே பெரிய வேலைக்காரன் என்று பெயர் வாங்கினோம். அதுக்குள்ள அசிங்கப் பட போறேனே என்று யோசனையாக இருந்தேன். என்ன பால்ட்டுனே பசங்கக்கிட்ட சொல்லாம அதை நகர்த்து கொஞ்சம் ஏத்து, அப்படி சுத்தியல்ல அடி என்று காரணமே இல்லாமல் வேலை வாங்கிக்கிட்டு இருந்தேன்.

சேரன் பாண்டியன்ல மெக்கானிசமே தெரியாம மோட்டாரை நோண்டுவாரே கவுண்டமணி, அந்த நிலைமையாகி போனது. எனக்கு. பெயிண்ட் டப்பா எடுத்து போட்டு மேலே ஏறி ரொம்ப சின்சியரா வேலை பாக்கிற மாதிரி கொஞ்ச நேரம் பாவ்லா பண்ணேன். 

இதுக்கு மேல சமாளிக்க முடியாதுங்கிற நிலைமை வந்தது. ஏதோ நினைப்புல ஸ்பிரிங்ல கொஞ்சம் ஆயில் போடுங்கப்பா என்று சொன்னேன். ஆயில் போட்டதுலேந்து சத்தம் வர்றது நின்னு போச்சி. எல்லாரும் சூப்பர் ஸார்னு கை கொடுத்து பாராட்டுனாங்க.

மறுபடியும் கிரீடம் தலைக்குப் போச்சி. நாம நல்ல வேலைக்காரனா இருக்கிறதை விட மத்தவங்களை நான் அப்படித்தான்னு நம்ப வைக்க ரொம்பத்தான் சிரமப்பட வேண்டியிருக்கு. ஒரே குஷ்டமப்பா.

ஆரூர் மூனா

7 comments:

  1. சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  2. சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  3. ஹா... ஹா... ஆனாலும் எதனால் என்பதை பிறகு அறிந்திருப்பீர்கள்... இல்லையெனில் அடுத்த முறை கீரிடம் டமால்... ஹிஹி...

    ReplyDelete