Friday 20 March 2015

கில்மா கதைகளை எழுதிய நான் - 2011 பழசு

இன்று இந்த சம்பவங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தால் மிகவும் சிரிப்பாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றுகிறது. நான் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை படித்தது. திருவாரூர் .சோ. ஆண்கள். மேல்நிலைப் பள்ளியில் இந்த பள்ளி நூற்றாண்டு கால வரலாறு உடையது. இந்த பள்ளியில் தான் கலைஞர், பேராசிரியர் .அன்பழகன். முரசொலி மாறன் படித்தனர்.

இந்த பள்ளியில் நான் 1993ம் ஆண்டு 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பெண்களின் மீதான ஈர்ப்பு தோன்றிய காலம் அது. முதன் முதலாக கில்மா புத்தகம் படித்ததும் அந்த காலக்கட்டத்தில் தான். அப்பொழுது எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் சுதாகர் ராஜ் மற்றும் ராஜா. எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம். சினிமாவுக்கு, ஆற்றில் குளிக்க, தேர் திருவிழா ஆகியவற்றில் சேர்ந்தே இருப்போம்.
அந்த கில்மா புத்தகங்கள் படிப்பதற்கு என்றே ஓர் இடத்தை ஓதுக்கி வைத்திருந்தோம். அது விளமல் பகுதியில் ஆற்றங்கரையை ஒட்டியிருந்த சுடுகாட்டின் பின்புறம். பத்து ரூபாய் சேர்த்து ஒரு புத்தகம் வாங்கி அங்கு எடுத்துச் சென்று மூவரும் அமர்ந்து படிப்போம். பிறகு எங்களுக்குள் சந்தேகங்களையெல்லாம்(!) நாங்களே தீர்த்துக் கொள்வோம். இன்று யோசித்துப் பார்த்தால் அது பெரும்பாலும் தவறாகவே இருக்கும்(பெண்களைப் பற்றி எங்களுக்கென்ன தெரியும் நாங்கள் படித்ததெல்லாம் ஆண்கள் பள்ளியில் மட்டுமே). படித்த பிறகு புத்தகங்களை திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள ஒரு ண்டபத்தில் ஒளித்து வைத்திருப்போம். சில நாட்களுக்கு பிறகு வேறொரு நண்பர்கள் குரூப்புக்கு அந்த புத்தகங்களை கொடுத்து விட்டு அவர்களிடம் உள்ள புத்தகங்களை பெற்றுக் கொள்வோம்.

தினம் ஒரு புத்தகங்களை வாங்குவோம். ஆனால் எங்களுடைய பாக்கெட் மணிக்கு அவ்வளவு செலவு செய்வது சாத்தியமில்லாத காரணத்தால் என்னடா செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது என்னுடைய அத்தை பையன் மன்னார்குடியில் உள்ள சதீஷ் இதற்கு ஒரு தீர்வை சொன்னான். இந்த புத்தகங்களில் வரும் கதையெல்லாம் உண்மை கிடையாது, ஒரு டுபாங் (போலி) எழுத்தாளர் தான் எழுதுகிறார் என்றும், நீயே முயற்சித்துப்பார் எழுத முடியும் என்றும் கூறினான். (ஆக என்னை முதன் முதலில் அவன் தான் எழுதத்தூண்டினான், அதுவும் கில்மா கதைகளை, கருமம்) சரி என்று நாங்களே எழுத முடிவு செய்தோம்.

இரு குழுக்கள் தாங்கள் கதைகளை எழுதுவது என்றும் எழுதியவர்களே படித்தால் மேட்டர் சப்பென்று இருக்கும் என்ற காரணத்தினால் நாங்கள் எழுதிய கதைகளை அவர்களிடம் ஒப்படைத்து விடுவது என்றும் அவர்களின் கதைகளை நாங்கள் எடுத்துக் கொள்வது என்றும் முடிவானது. எழுத நோட்டு வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்த போது, அப்பொழுதெல்லாம் ரப் நோட்டுக்காக ஒரு பக்கம் Dot Matrix Printerல் பிரிண்ட் எடுத்த பேப்பரினை வைத்து தைத்த நோட்டு கிடைக்கும் நல்ல நோட்டை விட குறைந்த விலைக்கு கிடைக்கும். ஒரு பெரிய நோட்டு 3ரூபாய். அந்த நோட்டை வாங்கி விட்டு அந்த சுடுகாட்டு பின்புறம் நானும் என் நண்பர்களும் கதை விவாதத்தை தொடங்குவோம். நான் தான் எழுதுவேன். ராஜாவும் சுதாகரும் கதையை சொல்வார்கள்.
. . . (Teen Agers) . . , . . - . BE () . . . . நமக்கு .

அவர்கள்இருவரும்ஏதோபெரியஎழுத்தாளர்போல்யோசிக்கநான்நடுநடுவேஐடியாக்களைகொடுப்பேன்ஒருவழியாகஒருநோட்டுமுழுவதும்எழுதியபிறகுநோட்டுகளைமாற்றிக்கொள்வோம்அதையெல்லாம்நினைத்தால்இன்றும்எனக்குசிரிப்புதாங்கமுடியாமல்வரும்

இன்றுள்ளபதின்இளைஞர்கள்செல்போனிலும்கம்ப்யூட்டரிலும்மிகச்சாதாரணமாகபிட்டுகளைபார்க்கிறார்கள்நமக்கேஆலோசனைசொல்லும்அளவுக்குஅவர்களுக்குகில்மாமேட்டரில்அறிவுஇருக்கிறதுஆனால்என்வயதில்புத்தகம்வாங்கவழியில்லாமல்நாங்களேஎழுதியகதைஏழைக்கேற்றஎள்ளுருண்டைதான்


இன்றுஎன்நண்பர்களில்சுதாகர்இல்லைஏழுவருடங்களுக்குமுன்திருத்துறைப்பூண்டிவேதாரண்யம்இடையேநடந்தசாலைவிபத்தில்பலியாகிவிட்டான்அவன்சிவில்முடித்தவன்அவனதுகனவுகள்நிறைவேறும்முன்காலன்அவன்உயிரைபறித்துவிட்டான்ராஜாதிருவாரூரில்ஆட்டோஓட்டிக்கொண்டிருக்கிறான்நானோசென்னையில்ரயில்வேயில்செக்ஷன்இஞ்சினியராகஇருக்கிறேன்என்றோநம்வாழ்வில்நடந்தசாதாரணசம்பவங்கள்பின்னாளில்வரலாறாகின்றன

மலரும்நினைவுகளைநினைத்துப்பார்த்தமகிழ்ச்சியுடன்


ஆரூர்முனா

No comments:

Post a Comment