Saturday 21 March 2015

மசாஜ் சென்ட்டரில் ஏமாந்த அறிவாளி - பழசு 2012



என் நண்பன் ஒருவன் சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தான். கல்லூரி படிப்பு முடித்ததும் சிங்கப்பூருக்கு சென்று தற்போது அங்கு நிரந்தர குடியுரிமை வாங்கி விட்டான். மற்ற ஊர்களெல்லாம் சுற்றி விட்டு மீண்டும் நேற்று சென்னை வந்தான். உடல் மிகவும் சோர்வாக இருப்பதாகவும் மசாஜ் பார்லர் சென்று உடலை ரீசார்ஜ் செய்தால் தான், மீண்டும் ஊர் சுற்ற முடியும் என்றான். முகவரியும் கேட்டான். எனக்கு எந்த பாரில் எந்த சரக்கு கிடைக்கும். எவன் பப்பில் அதிக சைட்டிஷ் கொடுப்பான் என்று கேட்டால் சொல்லுவேன்.

இந்த மசாஜ் சென்டரைப் பற்றி கேட்டால் எனக்கு என்ன தெரியும். அவனிடம் டெக்கான் குரோனிக்கல் பேப்பரில் விளம்பரம் பார்த்திருக்கிறேன். வாங்கிப் பார் தெரியும் என்றேன். அவனும் பார்தது ஒரு மசாஜ் நிலையத்திற்கு போன் செய்யவே அவர்கள் இடம் பற்றி கூறி விட்டு பேஜ் மசாஜ், ஹெட்மசாஜ், புல்பாடி மசாஜ், ஸ்டீம் பாத், ஹாட் வாட்டர் பாத் எல்லாம் சேர்த்து ஒருவர் செய்தால் 1000ரூபாய் எனவும், இருவர் என்றால் 1500ரூபாய் எனவும் கூறியுள்ளனர்.

அவன் இதை என்னிடம் கூறி விட்டு செல்லும் வழி கேட்டான். உடனே எனக்குள் அலாரம் அடித்தது. ஏதோ வில்லங்கமான இடம் அது என்று நினைத்து ஜொள் விட்டபடி நானும் வருகிறேன் என்று அவனுடன் கிளம்பினேன். இந்த பார்லர் அரும்பாக்கத்திலிருந்து MMDA காலனி போகும் வழியில் இருந்தது. பெரிதாக பெயர் பலகையெல்லாம் வைத்து ஒரு பெரிய அப்பார்ட்மெண்டின் மூன்றாவது மாடியிலிருந்தது. உள்ளே சென்றால் நிஜ பார்லர் போலவே இருந்தது. ஏற்கவே அங்கு ஆறு பேருக்கு பியூட்டி பார்லர் சேரில் அமர வைத்து பேஸ் மசாஜ் செய்து கொண்டிருந்தனர். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. நான் நினைத்து வந்தது வேறு. இது உண்மையான பார்லர் போல, நமக்கு இதெல்லாம் சரிவராது என்று நினைத்து அவனை மட்டும் மசாஜூக்கு செல்ல சொல்லிவிட்டு எனக்கு வேலையிருந்ததால் இரண்டுமணி நேரம் கழித்து வந்து பிக்அப் செய்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டேன்.

என் வேலையெல்லாம் முடித்து விட்டு அவனுக்கு போன் செய்தால் இன்னும் இரண்டு மணிநேரம் கழித்து வந்து பிக்அப் பண்ணிக் கொள் என்றான். எனக்கு கடுப்பாகி விட்டது. எனக்கு வேலையிருக்கிறது, நான் புறப்படுகிறேன். நீ ஆட்டோ பிடித்து வந்துக் கொள் என்று சொல்லி விட்டு புறப்பட்டு விட்டேன். அத்துடன் இதனை மறந்து விட்டு நான் ஐசிஎப் சென்று பிறகு வீட்டிற்கு வந்து விட்டேன்.

நேற்று இரவு அவன் எனக்கு போன் செய்து பாருக்கு வரும்படியும் கூறினான். நானும் சென்றேன். சில ரவுண்டுகள் உள்ளே போன பிறகு தான் அவனிடமிருந்து பகலில் நடந்த சம்பவங்கள் எல்லாம் வெளிவந்தன. பார்லரில் இரண்டு பெண்கள் அதுவும் சூப்பர் பிகர்கள், ஒன்று தமிழ்நாட்டுப் பொண்ணு, மற்றொன்று மிசோரம் பொண்ணு. இருவரும் அவனுக்கு சாதாரணமாக பேஸ் மசாஜ் மற்றும் ஹெட்மசாஜ் செய்துள்ளனர். அதன் பிறகு பாடி மசாஜ் என்று சொல்லி தனியறைக்கு கூட்டி சென்றுள்ளனர். அங்கிருந்து தான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.

அவனை எல்லா உடைகளையும் கழற்ற சொல்லிவிட்டு ஒரு கோவணத்தை அந்த பெண்களே கட்டி விட்டிருக்கின்றனர். அதன் பிறகு எல்லாவற்றையும் இங்கு சொல்வது சபை நாகரீகமாக இருக்காது. எல்லாம் சென்சார் தான், ஒரு மணிநேரம் கழித்து ஸ்டீம்பாத் எடுத்ததும் பாத்ரூமில் வெந்நீரை ஊற்றி அவர்களே குளிப்பாட்டியிருக்கின்றனர். அங்கு கட்டணமாக 1500ம் அந்த பெண்களுக்கு டிப்ஸாக ஆளுக்கு 2000ரூபாயும் கொடுத்திருக்கின்றான். வெளியில் வந்தவனுக்கு ஆசை அடங்காமல் மீண்டும் சென்று இரண்டாவது முறையாக மசாஜ் செய்து விட்டு திரும்பி வந்திருக்கிறான்.ஆக அன்று அவனுக்கு ஆன செலவு மொத்தமாக 11000 ரூபாய். அவனிடம் ஏண்டா வெறும் மசாஜூக்கு இத்தனை ரூபாய் செலவு பண்ண முட்டாள் நீதான்டா என்று திட்டி விட்டு வந்தேன்.

இவனையெல்லாம் என்னங்க பண்ணுறது, நம்ம சென்னையில் மசாஜூக்கு 11000 ரூபாய் செலவு பண்ணிட்டு சும்மா வந்தால் அவன் இளிச்சவாயன் தானே.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment