Sunday 22 March 2015

பரபரப்பான சென்னையில் பரபரப்பில்லாத வாழ்க்கை

பரபரப்பான சென்னை லைப்ஸ்டைலை விட்டு விலகி அமைதியா சென்னையிலேயே வசிப்பது அதற்கு விடப்படும் சவால் தான். ஆனால் இப்போ அப்படித்தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.


சென்னைக்கு வந்த 1997 முதல் 2013 வரை அதே பரபரப்பு, அதே டிராபிக் சிக்கல், அதே லேட் நைட் வாழ்க்கை என இருந்தாச்சி. இப்போ எல்லா பரபரப்புகளையும் விட்டு என் ஏரியாவின் பரப்பளவை நானே சுருக்கிக் கொண்டேன்.

தெற்கே ஐசிஎப், வடக்கே திருவிக நகர், கிழக்கே வியாசர்பாடி, மேற்கே வில்லிவாக்கம் நாதமுனி அவ்வளவு தான் என் சென்னை. இதை தாண்டி போவதே கிடையாது. ஊருக்கு செல்வதாக இருந்தால் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில் நிலையத்தில் ஏறி எழும்பூர் சென்று காரைக்கால் எக்ஸ்பிரஸ் பிடித்து திருவாரூர் சென்றடைவேன்.

திரும்ப வருவது கூட அதே வழி தான். மாலை 6 மணிக்கு மேல் வாசப்படியை தாண்டுவதில்லை. சனி, ஞாயிறு சூரிய வெளிச்சம் கூட உடம்பில் பட அனுமதிப்பதில்லை. இந்த வாழ்க்கை கூட பிடித்திருக்கிறது.


முந்தைய காலக்கட்டத்தில் பணிநிமித்தம் ஒரு நாளைக்கு 150 கிமீ வரை சென்னை பரபரப்பான டிராபிக் இடையே டூவீலரில் சுற்றுவேன். நான் வேலை பார்த்த கட்டுமான நிறுவனம் ஆலந்தூர் பாதாள சாக்கடை திட்டம், சூளைமேடு குடிநீர் திட்டம், போரூர் பைபாஸ் டோல்கேட் கட்டுமானம், தாம்பரம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுதல் போன்ற வேலைகளை டெண்டர் எடுத்திருந்தது. 

நான் தான் நிர்வாக அதிகாரி. எல்லா ப்ராஜக்ட்டுக்கும் சென்று ரிப்போர்ட்கள் தயார் செய்து தருவது, சில திட்டங்களுக்கு ப்ரொக்யூர்மெண்ட் ஆபிசராகவும் இருந்ததால் பர்சேஸ் ஆர்டர் போடுதல், அப்ரூவல் வாங்குதல் என அலைந்து கொண்டே இருப்பேன். 


இரவானால் மகாதியானம், கையேந்திபவன் உணவு, ரெண்டாம் ஆட்டம் சினிமா என்றே பத்து வருடங்களுக்கு ஏன் ரொட்டீன் ஒர்க்காக இருந்தது. ஞாயிறன்று கூட வேலை இருக்கும்.

நள்ளிரவு உணவகங்கள் எங்கே இருக்கும், போலீஸ் எந்த இடத்தில் செக்கிங் நிற்கும், நள்ளிரவில் எங்கெங்கே சரக்கு கிடைக்கும் வரை எல்லாமே அத்துப்படியாக இருந்தது.

அது தான் சம்பாதிக்கும் வாழ்க்கை என ஏற்றுக் கொண்டு இருந்தேன்.

கல்யாணத்திற்கு அப்புறம் கூட ஊர் சுற்றுதல் குறையவில்லை. 

என் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இப்போ தான் எல்லாத்தையும் கட் பண்ணி விட்டு வீட்டுக்கு அடங்கி இருக்கிறேன். மாறியதற்கு அப்புறம் பெரிசாக வித்தியாசம் தெரியவில்லை.

ஆனால், அப்புறம் ஒரு நாள் திநகருக்கு போக வேண்டிய வேலை வந்ததால் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திநகர் வழியில் சென்ற போது சென்னை இந்த ரெண்டு வருசத்தில் மாறிப் போன மாதிரியே இருந்தது. டிராபிக்கைப் பார்த்தால் எரிச்சலாக வந்தது.

அது போல இரவுகளில் சென்னை நகரின் சாலைகள் அனைத்துமே போலீஸின் கண்ட்ரோலில் இருப்பது போன்ற உணர்வு. எல்லா சாலைகளிலும்  செக்போஸ்ட்கள் அமைத்து வாகனங்களை கண்காணிக்கிறார்கள். 

இந்த லட்சணத்தில் கோடை வேறு வருகிறது. இந்த சமயத்தில் வெளியில் போற மாதிரி வேலை மாட்டினால் என்ன ஆவது என்ற கவலை தான் வருகிறது.

வெளியில் செல்வதாக இருக்கும் வேலைகள் தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லுதல், மார்க்கெட், துணி பர்சேஸ், சினிமா இப்போதைக்கு இவ்வளவு தான். 

தொழிற்சாலை வீட்டிலிருந்து ஒரு கிமீ தொலைவுக்குள் தான் இருக்கிறது. மார்க்கெட் திரு.வி.க நகர், துணி பர்சேஸ் பண்ண பெரம்பூர் ரேவதி ஸ்டோர், சினிமாவுக்கு வில்லிவாக்கம் ஏஜிஎஸ் அல்லது கொளத்தூர் கங்கா. அவ்வளவு தான் சோ சிம்பிள்.

இப்போதைய என் விருப்பம், இன்னும் ரெண்டு வருஷத்துக்குள் J.E (Junior Engineer) அல்லது சீனியர் டிடிஈ தேர்வெழுதி பாஸ் ஆகி டிரான்ஸ்பர் வாங்கி ஊர்பக்கமே செட்டிலாகி விட வேண்டும். பட்ட வரைக்கும் போதும் பரபரப்பான சென்னை வாழ்க்கை.

ஆரூர் மூனா

4 comments:

  1. ஏன் ப்ரோ வாழ்கை போர் அடிச்சிடிச்சா ?

    ReplyDelete
    Replies
    1. நான் எப்பங்க அப்படி சொன்னேன். நிறைய அலைஞ்சி ஊர் சுத்தியாச்சி. டிராபிக் தொல்லையில்லாத ஊர்ல செட்டிலாகனும் தானே சொன்னேன்.

      Delete
  2. இருந்தாலும் கொஞ்சம் யோசனை செய்யுங்க...

    ReplyDelete
    Replies
    1. அய்யா, பரபரப்பு போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி. நிதான லைப்புக்கு திரும்பலாம்னு பாக்குறேன்

      Delete