Saturday 21 March 2015

நண்பன் சினிமா விமர்சனத்தில் நடந்த தில்லுமுல்லு - பழசு 2012

அய்யா எல்லாருக்கும் வணக்கமுங்க.

எல்லாரும் என்னை மன்னிக்கனுமுங்க. நானா வேணும்னு செய்யலீங்க. நான் நேர்மையாத்தான் செய்யனும்னு நெனச்சேனுங்க. ஆனா நேத்து அது என்னகடுப்பேத்திச்சிங்க. அதனால நான் பதிலுக்கு விமர்சனத்தை போட்டுப்புட்டேங்க. உண்மையா உழைச்ச சிபிகிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்கறேனுங்க. போன் செய்து பேசியும் வாய் வரைக்கும் வந்த உண்மைய கஷ்டப்பட்டு மறைச்ச மோகன் குமார் அண்ணன் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேனுங்க.

நடந்தது என்னன்னா எங்க ஏரியாவுல நேத்து நண்பன் படம் ரிலீசாகல. அம்பத்தூர், ஆவடி, பாடி எங்கேயும் படம் நேத்து வெளியாகல. நேத்து காலையில 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிட்டு ராக்கி வந்தேன், படம் இல்லை. அடுத்ததா முருகன் வந்தேன், அங்கேயும் இல்லை. அப்புறம் 8 மணிக்கு கொளத்தூர் கங்காவுல ஷோவுன்னு கேள்விப்பட்டு அங்கே போனேன். டிக்கெட் கிடைக்கவில்லை. என்னடா கடுப்பேத்துதேன்னு மற்றொரு நண்பன் கிட்ட போன் பண்ணி வேற நம்ம பக்கம் எங்க ஒடுதுன்னு கேட்டேன். மூலக்கடை சண்முகான்னு சொன்னான். அங்கே போனேன். அங்கேயும் டிக்கெட் இல்லை.

பொறுமை இழக்க ஆரம்பித்தேன். அப்புறம் 9 மணிக்கு கோயம்பேடு ரோகிணில பாக்கலாம்னு வந்தேன். அங்கேயும் ஹவுஸ்புல். கொலைவெறியாகிட்டு வீட்டுக்கு வந்தேன். ஏன்னா அதுக்கு மேல படம் பார்த்திட்டு வந்து விமர்சனம் எழுதினா வேஸ்ட் ஆகிடும்.

ஒயின்ஷாப்ல ப்ளாக்ல ஆப் சரக்கு வாங்கினேன். வந்து ஆப்பையும் அடிச்சேன். த்ரீ இடியட்ஸ் மனசுல ஒட்டிக்கிட்டேன். கேரக்டர் பேரு வேணும்ல அதுக்காக யூடியூப்ல டிரைலர் டவுன்லோட் பண்ணேன். விவரங்கள் எடுத்துக்கிட்டேன். த்ரீ இடியட்ஸை அப்படியே நானே தமிழ்பெயர்களுடன் விமர்சனம் எழுதினேன். மட்டையாகிட்டேன். மதியம் மோகன் குமார் அண்ணன் போன் செய்து என்னுடைய விமர்சனத்தை யாரோ காப்பியடி்த்து போட்டிருக்கிறதா சொன்னார். நானே பொய்யான விமர்சனம் போட்டேன். அதையும் ஒரு நாதேரி காப்பியடிச்சிருக்கு. அதை அவர்கிட்ட சொல்ல முடியல. முழுங்கிட்டேன. சாரி மோகன் குமார் அண்ணா.

ஆனால் நாளைக்கு சத்தியமா வேட்டை படம் பார்த்திட்டு தான் விமர்சனம் எழுதுவேன். ஏன்னா இப்ப நான் இருக்கிறது என் ஊர்ல. இப்ப உண்மையிலேயே நண்பன் படத்துக்கு போறேன். நன்றி


ஆரூர் மூனா

No comments:

Post a Comment