Sunday 2 August 2015

மாணவர்களின் உண்ணாவிரதத்தால் வலுப்பெறும் போராட்டம் - பழசு மார்ச் 2013

படித்ததில் பிடித்தது : ஒரு பறவை தனது இனத்துக்காக வீழ்த்தப்பட்ட போதே அடுத்த பறவை போராட்டத்திற்கு தயாராகி விடுகிறது. ஆங்ரி பேர்ட்ஸ்(Angry Birds) சொல்லி தரும் வாழ்க்கை பாடம்


நீண்ட நாட்களாக ஈழ விவகாரத்தில் இது போன்ற ஒரு கொந்தளிப்பு மக்களிடையே ஏற்பட வேண்டும் என்று தான் காத்திருந்தேன். அரசியல்வாதிகளால் ஏற்படாத மாற்றம் மக்களின் கொந்தளிப்பினால் ஏற்படும் என நினைத்தது நிஜமாகத் தொடங்கியிருக்கிறது.

மக்களிடையே போராட்டத்திற்கு ஆதரவு வலுக்கத் தொடங்கியிருக்கிறது. மாணவர்கள் மற்ற ஊர்களில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். இது நிற்காமல் தொடர வேண்டும். ஈழ மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். சிங்கள போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

நான் இன்று சந்தித்த ரயில்வே தொழிலாளர்களிடையே உண்ணாவிரத பந்தலில் இருந்து மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட விஷயம் தான் பரவலாக பேசப்பட்டது. ஒவ்வொரு மக்களும் மனதால் கொதித்து போய் இருக்கிறார்கள். இன்றைய ஈழ மக்களின் நல்வாழ்வுக்கு தேவை தமிழக மக்களின் எழுச்சி தான்.


அதிகாரத்தில் இருக்கும் தமிழக தலைவர்கள் நல்லது செய்வார்கள் என்று காத்திருந்து காத்திருந்து ஈழத்தமிழர்களுடன் நாமும் தான் ஏமாந்து போனோம். இன்று அதனை மறைக்க திமுகவினர் என்னதான் போராட்டம் நடத்தினாலும் அதனை நம்பி ஏமாற படித்த மக்கள் தயாராக இல்லை.

வெறும் பொய் வாக்குறுதிகளாலும் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நம்ப வைத்ததாலும் மொழிபோரை தனக்கு சாதகமாக்கி ஏமாற்றியதாலும் தான் நல்லாட்சி செய்த காமராஜரை வீழ்த்தினார்கள் திமுகவினர்.

படிப்பறிவு குறைந்திருந்த அந்த காலத்தில் மக்கள் மனதால் சிந்தித்தார்கள். வெறும் வாய்ச்சவடால்களில்  ஏமாற்ற முடிந்தது. இன்று படிப்பறிவு பெற்ற மக்கள் நிறைந்திருக்கிறார்கள். புத்தியால் சிந்திக்கிறார்கள். இன்று என்னத்தான் குட்டிக்கரணம் அடித்தாலும் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.


ஆனால் பாருங்கள் இந்த மக்கள் படிப்பறிவு பெற்றதே இவர்களிடம் தோற்றுப் போன காமராஜரால் தான். தேவர் மகன் படத்தில் சிவாஜி சொல்லுவார். விதை நான் போட்டது, இதுல என்ன பெருமையா, கடமை என்று. அது அப்படியே காமராஜருக்கு பொறுத்திப் பாருங்கள். சரியாக இருக்கும்.

இவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் தான். 2009ல் மட்டும் இவர்கள் மத்தியில் ஆட்சியை விட்டு வெளியில் வந்து எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்திருந்தார்கள் என்றால், சத்தியமாக சொல்லுகிறேன், நெஞ்சை கிழித்து எழுதியிருப்பேன் தமிழினத் தலைவன் திமுக தலைவர் தான் என்று. என்னைப் போல் லட்சக்கணக்கான இளைஞர்கள் அந்த மனநிலையில் தான் இருந்தனர். அன்று சுயநலத்துக்காக ஒரு உண்ணாவிரத நாடகம் ஆடிவிட்டு இன்று என்னதான் டெசோ புசோ என்றாலும் யாரும் நம்பத்தயாராக இல்லை.

வெளியில் வந்திருந்தாலும் இலங்கையில் நடந்ததை தடுத்திருக்க முடியாது என்று கூறும் உபிக்களே, முட்டைய ஒடச்சா தான்யா ஆம்லேட்டு போட முடியும். இந்த முட்டையை உடைச்சாலும் ஆம்லேட்டு போட முடியாது, இது கூமுட்டைனா யாருய்யா ஒத்துக்குவான்.(கொஞ்ச சீப்பான உதாரணம் தான், ஆனால் அவசரத்திற்கு வேறு உதாரணங்கள் நினைவில் இல்லை)


ஏன் எங்களை மட்டும் சொல்லுகிறீர்கள், அதிமுக அரசு தானே மாணவர்களை அப்புறப்படுத்தியது என்று வெட்டிநாயம் பேசும் உபிக்களே. நாங்கள் என்றுமே அவர்களை ஈழ விஷயத்தில் எதிர்பார்த்தது இல்லை. கலைஞரை மட்டும் தானே காக்கும் கடவுள் என நம்பி வீணாப் போனோம்.

தயவுசெய்து இனியாவது மாணவர்களை சுதந்திரமாக போராட விடுங்கள். இப்பொழுது தான் போராட்டம் தமிழகமெங்கும் பரவ தொடங்கியிருக்கிறது. இதிலும் உங்கள் பாழாய்ப் போன அரசியலை நுழைத்து போராட்டத்தை நீர்த்துப் போக செய்யாதீர்கள்.

உம்மால் முடிகிறதா நீங்கள் தனியாக எதாவது செய்யுங்கள். ஆப்பிரிக்கா போங்கள், அம்பேரிக்கா போங்கள். மாநாடு போட்டு ஆகிற காரியத்தை பாருங்கள். மாணவர்கள் அவர்கள் வழியில் போராடட்டும். ஈழ மக்களுக்கு யார் மூலமாவது நல்லது நடந்தால் போதும் என எதிர்பார்த்து காத்திருக்கும் அப்பாவி தமிழன்.

ஆரூர் மூனா செந்தில்

-----------------------------------------------------------

கேஆர்பி செந்தில் பார்வையில் : மாணவர்கள் போரட்டத்தை மட்டுமல்லாது ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து எப்போதும் தனி ஈழ கோரிக்கையை முன்வைத்து போராடி வரும் வைகோ, நெடுமாறன், சீமான், கொளத்தூர் மணி, ராமதாஸ், தமிழருவி மணியன் போன்றோரை இணையத்தில் இயங்கும் நாலு புளியங்கொட்டைகள் கிண்டலடித்து வருகிறார்கள்.

தம்பிகளா ஒட்டு மொத்தமாக டி.யெம்,கேவை பின்னுக்கு கொண்டுபோகும் உங்களது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு போடாத பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நீங்கள் உங்கள் வாரிசுகளையாவது தன்மானத்துடன் வாழவிடுங்கள்.

ஏனெனில், பிரபாகரன் எனும் ஒப்பற்ற தலைவன் இனத்துக்காக களத்தில் தன்னையும், குடும்பத்தையும் பலிகொடுத்தார். உமது தலைவன் குடும்பத்துக்காக இனத்தையே பலி கொடுத்தவர்.

காலம் கடந்திருந்தாலும் சரியான சமயத்தில் போரட்டத்தை கையிலெடுத்திருக்கும் மாணவர் சமுதாயத்துக்கு எனது வணக்கங்கள்...
-----------------------------------------------------------------

உண்மை சுடும் இரா.ச.எழிலன் அவர்களின் பார்வையில் 2009 ...........

2009 என்று கூட சொல்ல முடியாது 2008-ன் பிற்பகுதி.

கைப்பேசி கிடையாது , இன்றைய அளவு இணையப்பயன்பாடு கிடையாது , முக்கிய செய்தி என்றாலும் தொலைபேசி வாயிலாகவே களத்திலிருந்து ' நம்பிக்கையான ' நபர்கள் யாரேனும் செய்தி கொடுத்தாக வேண்டும்.

No comments:

Post a Comment