Sunday 9 August 2015

யாருடா மகேஷ் - பழசு ஏப்ரல் 2013

இன்றும் தொழிற்சங்க தேர்தல் இருந்தும் தொழிற்சாலையின் உள்ளேயே சரக்கும் பிரியாணியும் கிடைத்தும் கூட அனைத்தையும் தவிர்த்து விட்டு காரணமே இல்லாமல் இன்று சினிமாவுக்கு போக வைத்தது இந்த படத்தின் டீசர் தான்.


ஆனால் போன பிறகு தான் தெரிந்தது இதற்கு பதில் தொழிற்சாலை உள்ளேயே குவார்ட்டர் விட்டுகினு பிரியாணி துன்ட்டு யாராவது ரெண்டு யூனியன் தலைவனுங்களை நேற்று மாதிரி இன்றும் சாத்தியிருக்கலாம் என்று. ஆனாலும் விதி வலியது.

படத்தின் டிரெய்லரில் இருந்து துணுக்கு நகைச்சுவை படம் முழுவதும் விரவி கிடக்கும் என எண்ண வைத்து மக்களை திரையரங்கிற்கு வர வைத்ததில் இந்த பட இயக்குனரின் திறமை முக்கிய பங்கு வகிக்கிறது.

படத்தின் கதை என்ன? கல்லூரியில் கடைசி மதிப்பெண் பெறும் நாயகனும் யுனிவர்சிட்டி பர்ஸ்ட் நாயகியும் ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் போது சந்திக்கிறார்கள். நாயகனுக்கு நாயகி மேல் காதல் வருகிறது. அரைமணிநேரத்தில் நாயகிக்கும் காதல் வந்து விடுகிறது.

மேலும் ஒரு கால் மணிநேரத்தில் நாயகியின் வீட்டில் யாரும் இல்லாத நாளில் காண்டம் வாங்கி வந்து பாதுகாப்பாக பஜனை நடக்கிறது.  நாயகனை சென்னையில் தவிக்க விட்டு அம்பேரிக்காவுக்கு படிக்கச் செல்கிறாள். ஆனால் பாருங்கள். மேனிபேக்சரிங் டிபெக்ட் காரணமாக குழந்தை உண்டாகி விடுகிறது.

சென்னைக்கு திரும்பி வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தை பிறந்து பல ஆண்டுகள் ஆகிய பிறகும் நாயகனுக்கு பொறுப்பு வராமல் வீட்டிலேயே குழந்தையுடன் விளையாண்டு காலத்தை கழிக்கிறார்.

ஒரு உச்ச ராகுகால நேரத்தில் இந்த குழந்தை நாயகிக்கும் மகேஷ் என்ற ஒருவனுக்கும் பிறந்தது என்ற விஷயம் நாயகனுக்கு தெரிய வருகிறது. மகேஷை தேடிப் புறப்படுகிறான். மகேஷ் கிடைத்தானா, குழந்தை யாருக்கு பிறந்தது என்பது தான் படத்தின் கதை.

சொல்லும் போது சுவாரஸ்யமான கதையாக தெரிந்தாலும் எடுத்த விதத்தில் மெச்சூரிட்டி இல்லாத காரணத்தால் படம் பப்படமாகி விட்டது. பாவம் தயாரிப்பாளர் அன்பழகன். ஏற்கனவே ஆதிபகவனில் பெரிய சைஸ் அல்வா வாங்கி வீட்டில் வைத்தவர், இந்த படத்தினால் சிறிய சைஸ் அல்வா உபரியாக கிடைத்திருக்கிறது.

நாயகன் சந்தீப் பார்க்க நன்றாக இருக்கிறார். நல்ல களையான முகம். சிறிது முயற்சித்தால் நடிப்பு கூடி வரும். இந்த படத்தை வைத்து இன்னும் சில படங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் ரியாக்சன் கம்மியாக இருக்கிறது.


நாயகி டிம்பிள் டிரைலரிலும் முதல் காட்சியிலும் பார்க்க ஏதோ ஒன்று இருக்கிறது என்று நினைக்கச் செய்தவர், போகப் போக அட்டுப் பீஸூ போல் தோற்றமளிக்கிறார். இந்தப் படம் கிடைத்ததே பெரிய விஷயம். மேக்கப் மட்டும் இல்லையென்றால் ப்ப்பா பேய் மாதிரி தான் இருப்பார்.

கொஞ்சமாவது படத்தில் உட்கார வைப்பது நண்டு ஜெகனின் காமெடி தான். அதுவும் அளவுக்கு அதிகமாக போய் ஆபாசத்தில் நெளிய வைக்கிறது. சரளமாக வகைதொகையில்லாமல் ஏ ஜோக் படம் முழுவதும் விரவி கிடக்கிறது. படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்ததற்கு காரணம் இந்த ஜோக்குகள் தான்.

படத்தில் ஜெகனுக்கு இரண்டு முறை லுல்லாவில் அடிபடுகிறது. முதல் முறை பவுடர் தெறித்து நரம்பு கட்டாகிறது. இரண்டாவது முறை வாய் வழியாக ..ட்டை வெளி வந்து பறவையாய் பறக்கிறது. இவ்வளவு தடைகளையும் தாண்டி குழந்தை பிறப்பது வாவ் மெடிக்கல் மிராக்கிள்.

படம் முழுவதுமே ஒரு நாடகத்தனத்துடன் எடுக்கப்பட்டு இருக்கிறது. ரோபோ சங்கர் வடிவேல் பாலாஜி காட்சிகள் அப்பட்டமான ஆபாசம். அப்பாவும் மகனும் இப்படியா பிட்டு படம் பார்க்க சண்டை போட்டுக் கொள்வார்கள்.

படத்தில் உள்ள ஒரு குத்தாட்டத்தில் ஆடும் நடிகை பயங்கர ப்ரச்சோதகமாக இருக்கிறார்.  சரின்னா இதைப் பண்ணனும் இல்லைனா பண்ணினவன் .... தொட்டுக் கும்பிடனும்.  நானே டென்சனாகிட்டேன்.

படத்தின் ஒரே மிகப்பெரிய ப்ளஸ் படத்தின் டிரெய்லர் தான். அதனை பார்த்து விட்டு படம் பார்க்க வருபவர்கள் தான் இவர்களின் டார்கெட். மற்றப்படி போகனும்னு நினைச்சீங்கன்னா அது உங்க தலையெழுத்து.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment