Sunday 24 May 2015

பஞ்சேந்திரியா - ககன் நரங் உடன் செத்தக்கிளி - பழசு 2012

லண்டன் ஒலிம்பிக் 2012ல் இந்தியாவுக்கு முதல் பதக்கம் துப்பாக்கி சுடுதலில் கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. இறுதிப் போட்டி துவங்கியதிலிருந்தே முன்னணியில் இருந்த ககன் 7வது சுற்றில் சட்டென்று 4ம் இடத்திற்கு இறங்கிப் போய் அதிர்ச்சியளித்தார்.

அடுத்த சுற்றில் சுதாரித்துக் கொண்டு மீண்டும் முதல் மூன்று இடத்திற்குள் வந்து இந்தியாவின் பதக்க வேட்டையை துவக்கி வைத்துள்ளார். சாமானியனாக நடக்கும் ஒலிம்பிக்கில் இந்தியாவின் செயல்பாட்டில் ஏகப்பட்ட கோபம் இருந்தாலும் இந்த வெண்கலப் பதக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

ககன் நரங்கிற்கு தோத்தவன்டா வலைப்பதிவின் வாழ்த்துக்கள். இந்தியாவின் பதக்க வேட்டை தொடரவும் வாழ்த்துகிறது.

--------------------------------

ரயில்வேயில் சக ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருப்பது பலப்பல புதிய தகவல்களை சுவாரஸ்யத்துடன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லாரும் 55வயதை கடந்தவர்கள் ஆனால் கடந்த 35 வருடங்களாக ஒரே குழுவாக பணியாற்றிக் கொண்டிருப்பதால் வாடா போடா என்று தான் அழைத்துப் பழகி கலாய்த்துக் கொள்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் ராஜேந்திரன். வயது 59. மற்றவர்கள் அவரை செத்தக்கிளி, செத்தக்கிளி என்று கலாய்ப்பார்கள் (காரணம் கூறவும் வேண்டுமோ). நேற்று பயங்கர கடுப்பாகி ஒரு கதையை எடுத்து விட்டார் பாருங்கள் நான் சிரித்து முடிக்க மட்டும் கால் மணிநேரமாகியிருக்கிறது.

கதை இதுதான். நம்ம கதாநாயகர் ராஜேந்திரன், சில வருடங்களுக்கு முன்பாக ராஜமுந்திரியின் அருகில் இருக்கும் பெத்தாபுரம் சென்றாராம். பெத்தாபுரம் என்ற ஊர் எதற்கு புகழ்பெற்றது என்பது வாலிப வயோதிகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நம்ம ஹீரோ ஒரு விடுதிக்கு சென்று ஒனரம்மாவிடம் (ஹீரோயின்) கில்மாவிற்கு புகழ்பெற்ற சரசம்மா (துணை ஹீரோயின்) வேண்டும் என்று கேட்டாராம்.

அந்த விடுதி என்பது முழு அறையாக இருக்காது. ஒரு பெரிய வராண்டாவில் தட்டி வைத்து சிறுசிறு தடுப்புகளாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும்.சரசம்மாவை ஒரு தடுப்புக்குள் நம்ம ஹீரோ அழைத்துச் சென்று கில்மாவை ஆரம்பித்தாராம். சிறிது நேரத்தில் 'ஆ' 'ஐயோ' 'அம்மா' என்று அலறல் ஒலி வெளியில் கேட்டிருக்கிறது. பயந்து போன ஓனரம்மா என்ன ஏது என்று விசாரிக்க தடுப்புக்குள் நுழைந்து 'ஏன் சத்தம் போடுகிறாய்' என்று கேட்டாராம்.

சரசம்மா 'இவர் பயங்கர அப்பாடக்கரா இருக்கிறார் என்னால் சமாளிக்க முடியாது' என்றாராம். அதற்கு சிரித்த ஓனரம்மா அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீ. அந்த காலத்தில் பெரிய கில்மாவான என்னை சமாளி என்று சவால் விட்டு களத்தில் இறங்கினாராம். மீண்டும் சிறிது நேரத்தில் 'ஆ' 'ஐயோ' 'அம்மா' என்று அலறல் ஒலி வெளியில் கேட்டதாம். எல்லாம் முடிந்ததும் வெளியில் வந்த ஹீரோ ஓனரம்மாவிடம் காசை கொடுத்தாராம். ஓனரம்மா வெட்கப்பட்டுக் கொண்டே 'உனக்கு மட்டும் ஃப்ரீ' என்றாராம்.

கதையை சொல்லிவிட்டு அடுத்து ஒரு பஞ்ச் டயலாக் அடித்தார். என்ன தெரியுமா "என்னை கலாயக்காதீங்கடா என் கிளி இப்பக்கூட கொத்தும் தெரியுமா"

----------------------------------

இந்திய ரயில்வேயில் டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கான நுழைவுத்தேர்வு வரும் டிசம்பரில் நடைபெறுகிறது. அதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசிநாள் நாளை. எனவே B.Sc (Physics), ITI மற்றும் அப்ரெண்டிஸ் முடித்தவர்கள் நாளை மாலை 05.30க்குள் RRB அலுவலகத்தில் கிடைக்குமாறு சமர்ப்பிக்க வேண்டும். நேரமில்லை என்று நினைப்பவர்கள் நேரடியாக RRB, Chemmai அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்டியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து விடலாம். அலுவலகம் அமைந்துள்ள இடம் எழும்பூரில் எத்திராஜ் காலேஜின் பின்புறம்.

மறந்து விடாதீர்கள், மறந்தும் இருந்து விடாதீர்கள். நாளை கடைசி.

-----------------------------------

சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்திற்கு DEEE மற்றும் BE(EEE) முடித்தவர்களுக்கான இன்டர்வியூ சென்னையில் வரும் 9 மற்றும் 10ம் தேதி நடைபெறுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டாவை senthilkkum@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும் அல்லது 8883072993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

------------------------------------

இனிதே பிறந்த நாள் காணும் பிறந்ததிலிருந்து இன்று வரை யூத்தாக மட்டுமே இருக்கும் எங்கள் அண்ணன் கேபிள் சங்கர் அவர்கள் பல்லாண்டு காலம் பூத்துக்குலுங்கும் இளமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அதே போல் அதே நாள் பிறந்த நாள் காணும் வாழும் வரலாறு, கழக போர்வாள், புதுக்கோட்டையின் சங்கம், எங்கள் தங்கம் அண்ணன் புதுகை அப்துல்லா அவர்களுக்கு புதுகை அப்துல்லா பாசறையின் சார்பாக பிறந்தநாள் வாழத்துக்கள்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment