Tuesday 26 May 2015

ஒரு கவிஞனின் அரங்கேற்றம் - பழசு 2012

நாலு வரி சேர்ந்தா மாதிரி எழுதிபுட்டு நடுவுல ரெண்டு எண்டர் தட்டி கவிதைங்கிறான். நாமளும் எத்தனை நாள் தான் வேடிக்கை பாக்குறது. அதான் நானும் தொபுக்கடின்னு களத்துல குதிச்சிட்டேன். இந்த கவிதை தொகுப்பை படிங்க, படிங்க கொமட்டிக்கிட்டு வர்ற வரைக்கும் படிங்க, புரியலைன்னா ஒரு பின்னூட்டம் அனுப்புங்க. நான் பின் நவீனத்துவ கவிஞனாகிட்டேன் என்பதை புரிஞ்சிக்கிறேன்.

தனிமையில் எப்போதும் பேசுகிறேன் நிலவோடு
என் தவம் அறிந்து இறங்கி வா என்னோடு
தனிமையில் செலவழிக்க நேரமில்லை உன்னோடு
உன்னிடம் கவிதை என்ற பெயரில்
மொக்கை போடும் நான் ஒரு கறுப்பாடு

--------------------------------------------------


மனதிற்கினிய பாடல் கேட்கும் போதெல்லாம்
உன் நினைவே என்னை தாலாட்டுகிறது
மறந்து விட்டு பணியில் கவனம் செலுத்த நினைக்கிறேன்
பேருந்தில் பாடல் வந்து தாலாட்ட கவனம் சிதறி
பேருந்து நிறுத்தம் கடந்து போகின்றேன்
பாடல் முடிந்த பின்னே உன்னை நினைத்து சிரித்து
இறங்கி வந்த வழியே நடக்கின்றேன்

-------------------------------------------------------

அன்பே நேசிக்க தகுதி வேணுமா
உன்னை நேசிக்க அழகன் எனும் தகுதி வேணுமா
உன் அருகில் அமர்ந்ததனால்
அழகாகி விட்டதாக உணர்கிறேன்
தெம்பான இளமையும் சேர்ந்திருக்கிறது
உன்னால் கிடைத்த ரெண்டையும் கொண்டு
மன்மதன் அம்பை உன் மீதே வீசுகிறேன்

-------------------------------------------------------

உரசத்தான் நினைக்கிறேன்
நினைத்துன்னை தொடர்கிறேன்
சற்றே தூரம் சென்று
விட்டு விலகி விலகி உன்னை
என் கண்முன்னே காணவில்லையே
அன்பே இன்றென்ன அமாவாசையா

---------------------------------------------------------

ஒன்று சேரும் நாளது வரும் என்று
இந்த கருமேகம் காத்திருக்கிறது
நிலாவின் தயக்கம் தாண்டி
என்னை அடையும் நாளோ பெளர்ணமி

-----------------------------------------------------------

உன்னை நிலவென்று நினைத்திருந்தேன்
சூரியனாய் சுள்ளென்று சுடுகிறாயே,
தெர்மிகூல் வாங்கி தடவிக்கிட்டேன்
வெயிலாவது வியர்வையாவது
சுட்டுப்பார் பொசுங்கிப் போவாய்

----------------------------------------------------------

நெடுந்தூரம் சென்றாலும் என் நினைவெல்லாம் நீதான்
பார்க்க முடியாவிட்டாலும் கண்ணுக்குள் உன் முகம் தான்
உன்னிடம் நேரில் பேசியது கொஞ்ச நேரம் தான்
இன்றும் என் காதுகளில் உன் ஒலிதான்
என்ன மாயம் செய்தாய் என் மனதை கலைத்தாய்

----------------------------------------------------------

உங்களது பொன்னாடைகளை வைத்து தான் இன்னும் மெகா கவிஞனாகி உங்களை வதைக்கலாமா, இல்லை போதும்டா சாமி என்று விலகலாமா என்று முடிவு செய்யலாம் என்று இருக்கிறேன்

ஆரூர் மூனா

No comments:

Post a Comment