Tuesday 26 May 2015

பதிவர் சந்திப்பை குலைக்க நடக்கும் சதிகள் - பழசு 2012

மிகப்பெரிய பதிவர் சந்திப்பு பல வருடங்களாக சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு ஒரு சிலரின் ஒத்துழைப்பின்மையால் கைவிடப்பட்டே வந்தது. ஐயா சென்னைப் பித்தன், புலவர் ராமானுஜம், மின்னல் வரிகள் கணேஷ் மற்றும் கவிஞர் மதுமதி ஆகியோரால் மிகச்சிறிய அளவில் பதிவர் சந்திப்பு என்று துவங்கப்பட்டு மற்ற பதிவர்களால் கைதூக்கப்பட்டு மிகப் பெரிய பதிவர் சந்திப்புக்கு அடிக்கோலிடப்பட்டது.

பொதுவாக ஒரு விஷயம் நல்ல முறையில் நடக்க ஆரம்பித்தால் அது உடனடியாக சில கருங்காலிகளால் திட்டமிடப்பட்ட பொய்ப்பிரச்சாரத்தினால் அதன் வீரியத்தை இழந்து விடுவதுண்டு.

இந்த சந்திப்புக்கு சில கருங்காலிகள் திருஷ்டிப்பொட்டு வைக்க முயன்றிருக்கிறார்கள். நண்பர்களே நீங்கள் என்னதான் முயற்சித்தாலும் பதிவர் சந்திப்பில் குழப்பம் ஏற்படுத்த உங்களால் முடியாது.

நானும் நக்கீரனும் குடிக்கிறோம். குடியைப் பற்றி எங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறோம் என்பது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். நானோ அல்லது என் நண்பர்களோ குடித்து விட்டு பதிவர் சந்திப்புக்கு வந்ததை பார்த்ததுண்டா?

இரவு தனியறையில் குடித்து விட்டு யாருக்கும் இடைஞ்சல் செய்யாமல் இருப்பவன் நல்லவனா? நான் பெரியவன் என் குழு பெரியது என்று பொது இடத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பேசி கெடுக்க நினைக்கும் நீங்கள் நல்லவர்களா?

ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னையும் என் நண்பரையும் தாக்கி பதிவிட்டு இருக்கிறார். அவர் செய்தது தவறு என்று நான் குற்றம் சாட்டுகிறேன். அந்த உரையாடலில் எந்த சம்மந்தமும் இல்லாமல் அவர் உன் குழுவை சேர்ந்தவர் என்பதற்காக அவருக்கு வக்காலத்து வாங்குவது எந்த வகையில் நியாயம்.

பதிவர் சந்திப்பை குலைக்கும் வகையில் பேசி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அது வெற்றி பெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி முகமது ஆஷிக் போன பதிவில் சம்மந்தம் இல்லாமல் நீ பதிவிட்டு இருக்கும் போதே நினைத்தேன். உங்களது அடுத்த டார்கெட் நானாக இருப்பேன் என்று. செயல்படுத்தி விட்டாய் நன்றி.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment